<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7146427</id><updated>2011-04-21T20:21:58.217-07:00</updated><title type='text'>சரித்திரப் பதிவுகள் - வந்தியத்தேவன்</title><subtitle type='html'>தொடரும் குளம்பொலி....</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://ravichandrika.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7146427/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://ravichandrika.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Vanthiyathevan</name><uri>http://www.blogger.com/profile/11863726847622025741</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>8</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7146427.post-110792612469501968</id><published>2005-02-08T21:12:00.000-08:00</published><updated>2005-02-08T21:36:48.966-08:00</updated><title type='text'>சரித்திரப் பதிவுகள் - 7</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;பேய்க்கப்பல் &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#006600;"&gt;"அடையாளந் தெரியாத ஐந்து கொடிக்கம்ப பாய்மரக் கப்பலொன்று டயமண்ட் ஷோல்ஸில் (Diamond Shoals). பாய்கள் விரித்த நிலையில். அவசரகாலப் படகுகள் காணவில்லை. கப்பலில் எவரும் இருப்பதாய் தெரியவில்லை. கடல் கொந்தளிப்பால் கப்பலை நெருங்க முடியவில்லை."&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=vanthiyathevan&amp;pid=274907&amp;amp;sid=pFV74gnwA5" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1921 ஜனவரி 31' அன்று எலிஸபெத் நகரிலிருந்து, அமெரிக்க கரையோர பாதுகாப்பு தலைமையகத்துக்கு தந்தி வந்தது. நான்கு நாட்கள் கழித்து ஒருவழியாய் அப்பாய்மரக் கப்பலின் கதி தெரிய வந்தது. கப்பலின் பெயர் கேரோல் ஏ. டியரிங் (Carroll A. Deering). தரை தட்டிய கப்பலை கடலைகள் ஆக்ரோஷமாய் தாக்கிக் கொண்டிருந்தன. 'கடல் கேரலின் கதையை முடித்து விட்டது. இனிமேல் கடற்பயணமே மேற்கொள்ள முடியாதபடி கேரல் சேதமாகிவிட்டது' என்று மீட்கச் சென்ற கேப்டன் ஜேம்ஸ் கார்ல்ஸன் கூறினார். இரண்டு பாய்களைக் காற்று கிழித்த நிலையில் கேரோல் பரிதாபமாய் காட்சியளித்தாள். அவளது நங்கூரங்களைக் காணவில்லை. சமையலறையில் வெந்தும் வேகாத நிலையில் உணவுப் பொருட்கள் சிதறிக் கிடந்தன. உயிர் காக்கும் படகுகள் காணவில்லை. சுக்கானோ சுக்கு நூறாக உடைந்து கிடந்தது. அருகே ஒன்பது பவுண்ட் எடையுள்ள பெரிய சம்மட்டி அமைதியாய் கா(சா?)ட்சியளித்தது. கப்பல் அபாயத்தில் இருப்பதாய் அறிவிக்கும் சிவப்பு விளக்கு ஒரு கொடிமரத்தில் எரிந்து தீர்ந்தபின் அணைந்து போயிருந்தது. கடற்வரைபடம் மேடையன்றில் இருந்தது. திசை காட்டும் கருவிகள், காலமானி மற்றும் தீர்க்க ரேகையை அறிய உதவும் குரோனோமீட்டர் (Chronometer), கப்பலின் குறிப்புப் புத்தகம் (Ship's Log) போன்றவை மாயமாய் மறைந்துவிட்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக்கியமாக கப்பலின் காப்டனான வில்லிஸ் வோர்மல் (Willis Wormell) உட்பட 11 மாலுமிகள் கதி என்னவாயிற்றென்று தெரியவில்லை. கப்பலில் எஞ்சியிருந்வை மூன்று பூனைகள் மட்டுமே. அவையும் பசியுடன் மெலிந்து காணப்பட்டன. அப்பூனைகளுக்கு மட்டும் வாயிருந்திருந்தால் கேரோல் பற்றிய உண்மைகளை உலகம் அறிந்திருக்க முடியும். ஆராய்ச்சியாளர்களால் பேய்க்கப்பல் என்று வருணிக்கப்படும் கேரோலில் அப்படி என்னதான் நடந்திருக்கும்? இக்கப்பலின் கதை பர்முடாஸ் முக்கோண திகிலுக்கு கொஞ்சமும் குறையாதது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கேரோலின் பிறப்பு&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;பாத் கரையில் 4/4/1919 அன்று கேரல் கட்டுமானம் முடிந்து கடலுக்கு வந்தது. டியரிங் நிறுவனமானது தனது நிறுவனரின் மகன் பெயரையே இக்கப்பலுக்கு சூட்டி மகிழ்ந்தது. 255 அடி நீளமுள்ள கேரோல் அப்போது 'மிகச்சிறந்த பாய்மரக் கப்பல்' என்று வருணிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;19/08/1920 அன்று டியரிங் கப்பல் வில்லியம் எம். மெரிட் தலைமையில் பாஸ்டனிலிருந்து பியூனஸ் ஐயர்ஸ் மற்றும் ரியோடி ஜெனிரோவுக்கு பயணமாகத் தயாரானது. வில்லியம்ஸ் தனது மகனையே முதன்மை அதிகாரியாகவும் நியமித்தார். மேலும் ஒன்பது மாலுமிகளும் கப்பல் குழுவில் நியமிக்கப்பட்டார்கள். அக்குழுவில் ஒருவரான டென்மார்க்கைச் சேர்ந்த பீட்டர் சோரன்ஸன் என்பவர் தனது குடும்பத்திற்கு கடற்பயணம் குறித்து கடிதமும் எழுதினார். ஒருவழியாய் ஆகஸ்ட் இறுதியில் கேரோல் தனது பயணத்தைத் தொடங்கியது. துரதிருஷ்டவசமாக கேப்டன் வில்லியம் கடுமையான நோய்க்கு ஆட்பட்டார். அதனால் அவரும், அவரது மகனும் பயணத்திலிருந்து விலகிக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;டியரிங் நிறுவனம் கேப்டன் வில்லிஸ் டி. வோர்மல் (Willlis T. Wormell ) என்ற ஓய்வு பெற்ற அதிகாரியை தலைமைப் பதவியில் நியமித்தது. அறுபத்தியாறு வயதான வில்லிஸ் கடற்பயணத்தில் அனுபவசாலி மட்டுமல்ல; மிகவும் நம்பகமான அதிகாரியும் கூட. சார்லஸ் பி. மெக்லெல்லன் (Charles B. MeLellan) என்பவர் வில்லிஸ¤க்கு முதன்மை அதிகாரியாக அறிவிக்கப்பட்டார். ஒருவழியாக நிலக்கரியை ஏற்றிக் கொண்டு 8/9/1920 அன்று ரியோவிற்கு கேரோல் புறப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாய் கப்பல் நவம்பர் இறுதியில் ரியோ வந்து சேர்ந்தது. நிலக்கரியை இறக்கியபின் கப்பற்குழுவிற்கு லிபர்டி எனப்படும் கரையை சுற்றும் வாய்ப்பும் தரப்பட்டது. கேப்டன் வோர்மல் தனது முன்னாள் நண்பரான கேப்டன் குட்வினை சந்திக்கும் அரிய வாய்ப்பும் கிட்டியது. அப்போது தனது தோழருடன் அந்தரங்கமாய் அளவளாவும்போது தனது முதன்மை அதிகாரியான மெக்லெல்லன் மீது தனது கடும் அதிருப்தியை தெரிவித்தார். ஆனால் கப்பல் இஞ்சினியனரான பேட்ஸ் மீது தனக்கிருக்கும் அதீத நம்பிக்கையை தெரிவிக்கவும் அவர் தவறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் இரண்டாம் தேதியன்று கேரோல் ரியோவிலிருந்து தனது தாயக கரையான போர்ட்லாந்து நோக்கி புறப்பட்டது. வழியில் பார்படோஸில் பயணப் பொருட்களை வாங்குவதற்காக நங்கூரமிட்டது. அப்போது லிபர்ர்டியில் வெளியே சென்ற மெக்லெல்லன் நன்றாக குடித்துவிட்டு கலாட்டா செய்தமையால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். வோர்மல் தன்னால் முடிந்தவரை அவர்களை சமாதானம் செய்து மெக்லெல்லனை சிறையிலிருந்து மீட்டு வந்தார். அப்போது இருவருக்கும் ஒரு பெரிய வாக்குவாதம் நடந்ததாகவும், அப்போது மெக்லெல்லன் வோர்மலை கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் நம்பப்படுகின்றது. கமாண்டிங் ஆபீஸரை இவ்வாறு மிரட்டியதற்கு மெக்லெல்லன் கடுமையான தண்டனை பெற்றிருக்கலாம். ஆனால் வோர்மலுக்கு அதற்கான நேரம் கிட்டவில்லை. போர்ட்லாந்து சென்றடைந்தால் போதுமென்று வோர்மல் நினைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி 29'ம் தேதியன்று வடக்கு கரோலினா மாநிலமருகே ரோந்துக் கப்பலொன்று டியரிங்கைக் கடந்தது. அக்கப்பலின் கேப்டனான தாமஸ் ஜேகப்ஸனை, டியரிங் கப்பலிலிருந்த ஒருவன் சப்தாமாக விளித்தான். ஒல்லியாக, உயரமாக, சிவப்பு நிற முடியுடன் குவார்ட்டர்டெக் (Quarterdeck) எனப்படும் கப்பலின் நுழைவாயிலில் நின்று கூவியவன் ஒரு அதிகாரி போல் தெரியவில்லை. மேலும் டியரிங் கப்பல் குழு முழுதும் குவார்ட்டர்டெக்கில் நின்றது போல் ஜேகப்ஸனுக்கு தோன்றியது வியப்பையளித்தது. "டியரிங் கப்பலின் நங்கூரம் மூழ்கிவிட்டது. இதை டியரிங் கம்பெனிக்கு தெரியப்படுத்துங்கள்", என்பதே ஜேகப்ஸனுக்கு தெரிவிக்கப்பட்ட தகவலின் சாரம்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ரோந்துக்கப்பலின் ரேடியோ பழுதாகிவிட்டிருந்தமையால் ஜேகப்ஸன் தன்னைக் கடந்த ஒரு வேறொரு நீராவிக்கப்பலை நிறுத்தும்படி சமிஞ்கை செய்தார். அக்கப்பலின் பெயர் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டிருந்தது. ஜேகப்ஸன் ஏன் அக்கப்பலை பின்தொடரவில்லையென்பது தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்கள் கழித்து டியரிங் கப்பல் டயமண்ட் ஷோல்ஸில் தரைதட்டியிருந்தது. குழுவினரோ மாயமாய் மறைந்துவிட்டிருந்தனர். கப்பலை கரைக்கு இழுத்து வந்தாலும் மீண்டும் கடற்பயணம் செய்ய முடியாத அளவிற்கு சேதாரம் அதிகமாகிவிட்டிருந்தமையால் அங்கேயே கைவிடப்பட்டது. மார்ச் 4'ம் தேதி 1921 அன்று வெடிகுண்டுகள் வைத்து டியரிங் தகர்க்கப்பட்டது. அக்கப்பலோடு அதன் மர்மங்களும் புதைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவின் ஐந்து வெவ்வேறு துறையினர் டியரிங் கப்பலைப் பற்றி தமது தனிப்பட்ட விசாரணைகளைத் துவக்கினர். வர்த்தக அமைச்சரான ஹெர்பர்ட் ஹ¥வர் (Herbert Hoover) இவ்விசாரணையில் தீவிர ஆர்வம் செலுத்தினார். டியரிங் காணமல் போன காலகட்டத்தில் மேலும் ஒன்பது கப்பல்கள் அதே இடத்தைச் சுற்றி தொலைந்து விட்டிருந்தன. ஹீவிட் (Hewitt) என்ற சரக்குக் கப்பல் டெக்ஸாஸ் மாநிலத்திலிருந்து போர்ட்லாந்திற்கு சல்பர் ஏற்றி வரும்போது 42 பேருடன் காணாமல் போனது. கடைசியாக அக்கப்பலிடமிருந்து 25 ஜனவரிக்கு தகவல் பரிமாற்றம் நடந்தது. மேலும் இத்தாலி மற்றும் ஸ்பெயினுக்கு சொந்தமான கப்பல்கள் அட்லாண்டிக் கடலைக் கடந்து ஐரோப்பா கண்டம் அடையும் போது காணாமல் போயின. ஒட்டாவா (Ottawa) என்ற எரிபொருள் சுமந்த கப்பல் நோர்போல்க்கிலிருந்து இங்கிலாந்தை நோக்கி வருகையில் 33 குழுவினருடன் தொலைந்து போனது. மேலும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 5 கப்பல்கள் போன இடம் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஹ¥வரின் வலதுகரமான லாரன்ஸ் ரிச்சி (Lawrence Richey) என்பவர் இது குறித்து விசாரணையைத் தொடங்கினார். ரிச்சி முதலில் டியரிங் மற்றும் அதனைப் பார்த்த ரோந்துக் கப்பல்களின் குறிப்புப் புத்தகங்களை ஆராய முற்பட்டார். இதன்மூலம் டியரிங் கப்பலுக்கு நேர்ந்ததை துல்லியமாக கணிக்க முடியுமென்று திண்ணமாக நம்பினார். ரோந்துக் கப்பலின் கேப்டன் ஜேகப்ஸன் தனது குறிப்புப்புத்தகத்தில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் விலாவாரியாக விவரித்திருந்தார். ஜேகப்ஸனின் விசில் சமிஞ்கைக்கு நிற்காமல் போன பெயர் மறைக்கப்பட்ட நீராவிக்கப்பல் யாதென்ற கேள்வி ரிச்சியைக் குடைந்தது. சட்டவிரோதமாக சாராயம் கடத்தும் கப்பலாக இருக்கலாமென்பது ஒரு யூகம். நிறுத்தினால் மாட்டிக் கொள்வோமென்ற அச்சத்தால் ஓடியிருக்கலாம். இந்த மாயக்கப்பல் சிறிது தூரத்தில் முன்னே சென்று கொண்டிருந்த டியரிங்கைப் பார்த்திருக்கலாம். டியரிங் குழுவினர் உதவி வேண்டி மாயக்கப்பலை நோக்கி கூவியிருக்கலாம். எங்கே போட்டுக் கொடுத்து விடுவார்களோவென்ற அச்சத்தில் அப்போது அக்கப்பலின் குழுவினரை மாயக்கப்பல் ஆட்களால் தீர்த்துக்கட்டப்பட்டிருக்கலாம். இதுவும் ஒருவகை அனுமானமே.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாயக்கப்பல் ஹீவிட்டாக இருக்கலாமென்பது இன்னொரு யூகம். ஏனெனில் கிடைத்த தகவல்களின்படி அச்சமயத்தில் டியரிங்கிற்கு அருகே ஹீவிட் மட்டும்தான் இருந்திருக்க முடியும். அப்படியானால் ஹீவிட் ஏன் நிற்கவில்லை? ஜேகப்ஸன் ஏன் தனது குறிப்புப் புத்தகத்தில் ஹீவிட்டைப் பற்றி பதியவில்லை? புதிர் மேலும் இறுகியது. 1921, ஜீன் 23'ம் தேதி நியூயார்க் டைம்ஸ் நாளேடு மறைந்த கலங்களை தனது தலைப்புச் செய்தியாக்கியது. "மறைந்த கப்பல்களின் மர்மம் விலகாது, அதிகாரிகள் கலக்கம்". ஒருவேளை இவை கடற்கொள்ளையரின் கைவரிசையாக இருக்குமோவென்ற ஐயப்பாடும் எழுந்தது. மறைந்த கப்பல்களை ரஷ்யர்களின் கைங்கர்யமென்று ஆதாரமின்றி ஏசிய காலமது. ஏனெனில் மறைந்த கப்பல்களின் சரக்குகளை வெளிப்படையாக இறக்குமதி செய்ய ரஷ்யாவின் செஞ்சட்டை சகோதரர்கள் தடை விதித்திருந்தார்கள். ரஷ்யாவின் துறைமுகங்களின் பெயர் மறைக்கப்பட்ட கலங்கள் இருப்பதாக வதந்திகளும் பரவின.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்நாட்டையும் சேராத கடற்கொள்ளையர்கள் நீர்மூழ்கி வழியே வந்து அட்டகாசம் செய்வதாக மற்றொரு வதந்தி இறக்கை கட்டி பறந்தது. நெருப்பில்லாமல் புகையுமா? கிரிஸ்டோபர் கொலம்பஸ் கிரே (Christopher Columbus Gray) என்பவர் ஏப்ரல் மாதம் 11'ம் தேதியன்று வடக்கு கரோலினா மாநிலத்திலுள்ள பக்ஸ்டன் கடற்கரையில் ஒரு பாட்டிலை கண்டுபிடித்தார். அப்பாட்டிலினுள்ளே ஒரு குறிப்பு காணப்பட்டது. அதில் காணப்பட்ட செய்தி:"டியரிங் கப்பல் மற்றொரு விசைக் கப்பலால் துரத்திப் பிடிக்கப்பட்டது. குழுவினரை சிறைப்படுத்தி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. யாரும் தப்பிப் பிழைக்க வாய்ப்பில்லை. டியரிங் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்துங்கள்."&lt;br /&gt;&lt;br /&gt;வோர்மலின் மகளான லூலா வோர்மல் தனிப்பட்ட முறையில் தனது விசாரணையை நடத்திக் கொண்டிருந்தார். கிரே பாட்டிலில் கண்டெடுத்த குறிப்பின் நகலை கையெழுத்து நிபுணர்களிடம் கொடுத்து ஆராயச் சொன்னார். குறிப்பிலிருந்த கையெழுத்து டியரிங் கப்பலில் இஞ்சினியரான ஹெர்பர்ட் பேட்ஸின் கையெழுத்தைப் போன்றே இருந்தது. பேட்ஸ் தனது மனைவிக்கு எழுதிய கடிதங்களிலிருந்து கையெழுத்து ஒப்பு நோக்கப்பட்டது. பாட்டிலில் கிடைத்தது தனது தந்தையின் நம்பகத்துக்குறிய பேட்ஸ் எழுதிய குறிப்பாகவே லூலா நம்பினார். இது குறித்து மேலும் அறிய தனது பாதிரியாரான டாக்டர். ஆடிசன் லோரிமரை (Rev. Dr. Addison B. Lorimer) அணுகினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மர்ம பாட்டிலும், அதனுள்ளே இருந்த குறிப்பும் லோரிமர் மூலம் விசாரணை செய்யும் அமெரிக்க அதிகாரியான ரிச்சிக்கு அனுப்பப்பட்டது. அப்பாட்டில் பிரத்தியேகமாக ரியோ-டி ஜெனிரோவில் தயாரிக்கப்படும் தகவல் 'விசைப்படகு கொள்ளையர்' யூகத்திற்கு மேலும் நம்பகத்தன்மையூட்டியது. பாட்டிலும், அதன் குறிப்பும் சூழ்நிலை ஆதாரங்களாக (Circumstantial Evidences) கருதப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரிச்சியின் விசாரணை &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிரேயின் பாட்டில் குறிப்பைத் தவிர வேறெந்த துப்புகளும் ரிச்சிக்கு உதவியாயில்லை. கப்பல்களை இழந்த மற்ற நாடுகளோ ரிச்சிக்கு மண்டையிடி கொடுக்க ஆரம்பித்தன. குறிப்பாக இத்தாலி கொடுத்த குடைச்சல் சொல்லி மாளாது. டியரிங்கை விட்டுவிட்டு இத்தாலி கப்பலைப் பற்றி ரிச்சி விசாரிக்க ஆரம்பித்தார். பிப்ரவரி மாதம் 1921'ம் ஆண்டு அட்லாண்டிக் மாக்கடலில் பெரும் சூறாவளி உருவானது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் முன்னெச்சரிக்கை செய்யும் வித்தையை மனிதன் கற்றிருக்கவில்லை. இச்சூறாவளியை ஜூலை மாதம்தான் நடந்ததாய் உணர்ந்தார்கள். ஹ¥விட், டியரிங் தவிர தொலைந்த மற்ற கப்பல்கள் அனைத்தும் இச்சூறாவளியின் மையம் நோக்கி பயணித்தமையால் கடற்கொந்தளிப்பால் மூழ்கியிருக்க வாய்ப்புகள் அதிகம். எனவே 'விசைப்படகு/நீர்மூழ்கி கடற்கொள்ளையரின் அட்டகாசம்' கொள்கை வலுவிழந்தது. ஹ¥விட் கதி என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் டியரிங் தரைதட்டி காட்சியளித்ததே? சூறாவளியில் சிக்கவில்லை. நங்கூரமில்லை. குழுவினரில்லை. அப்படியென்றால் கப்பலினுள்ளே உள்கலகம் (Mutiny) நடந்திருக்கலாமோ?&lt;br /&gt;&lt;br /&gt;ரிச்சியின் விசாரணையில் ஆகஸ்ட் மாதம் முக்கிய திருப்பமொன்று நிகழ்ந்தது. பாட்டிலும், அதன் குறிப்பும் போலியானதென்று கிரே அமெரிக்க உளவாளியிடம் கூறிவிட்டு பக்ஸ்டனிலிருந்து தப்பியோடிவிட்டார். கிரே ஏனிப்படி செய்தார்? துறைமுக வேலையன்று கிடைக்குமென்று நம்பி இம்மோசடியை துணிந்து செய்தார். 'வாங்க வேலை கொடுக்கின்றோம்', என்று ரிச்சி மறைமுகமாய் கிரேவிற்கு தெரியப்படுத்தினார். வேலையை ஏற்க வந்த கிரேயை கைது செய்து கம்பியெண்ண வைத்தார் ரிச்சி.&lt;br /&gt;&lt;br /&gt;சூறாவளியால் மற்ற கலங்கள் மறைந்தன. பாட்டிலும், குறிப்பும் போலியானவை. எனவே மர்ம கொள்ளையர் கதையும் பணாலாகியது. அப்படியென்றால் டியரிங்கில் என்னதான் நடந்திருக்கும்? இந்நூலைப் பிடித்து ரிச்சி விசாரணையைத் தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹ¥விட் மற்றும் டியரிங் கப்பல்களில் வேலை பார்த்த குழுவினரின் அங்க அடையாளங்களை பல்வேறு நாடுகளில் கடற்கரையிலமைந்த தனது தூதரகங்களுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது. தொலைந்த கப்பல்கள் பற்றி மக்கள் மறந்துவிட்டிருந்தாலும் அமெரிக்கா தனது விசாரணையை நிறுத்தவில்லை. என்னதானிருந்தாலும் தொலைந்தது தனது கலங்களல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து வில்பர் கார் (Wilbur J. Carr) என்பவர் தூதரகங்களுக்கு அனுப்பிய 'மர்மமான முறையில் மறைந்த அமெரிக்க கலங்கள்' என்ற தலைப்பிட்ட சுற்றறிக்கையில் அறிவித்ததாவது: "....சந்தேகப்படும் நபர்களை கவனத்தில் கொண்டு விசா மறுதளிக்கவும். உடனடியாக பாதுகாப்புத்துறையை தொடர்பு கொண்டு விபரம் தெரிவிக்கவும்....."&lt;br /&gt;&lt;br /&gt;போர்ச்சுகலிலிருந்து முதல் பதில் அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு வந்தது. மார்டின்ஸ் என்ற பெயரில் ஹீவிட் குழுவிலிருந்தவன் சாயலில், ஸ்காட்லாந்து பாஸ்போர்ட்டில் ரியோடிஜெனிரோ செல்லும் 'வெஸ்ட் மாக்ஸிமஸ்' சமையல் ஆளாய் பயணிக்கின்றான். ஆனால் இந்த மார்டின்ஸ் வேறு. ஹ¥விட்டில் இருந்தவனில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதேபோல் டியரிங்கில் பணிபுரிந்த H.C. ஜென்ஸன் மற்றும் பீட்டர் நீல்ஸன் என்னும் மாலுமிகள் டெக்ஸாஸ் மாநில கடற்கரையில் வரவிருப்பதாக செய்தி வந்தது. FBI அதிகாரிகள் இருவரையும் பிடித்து விசாரித்தனர். ஹீவிட் மற்றும் டியரிங் கப்பல்களின் மர்மங்கள் நிகழ்ந்த காலகட்டத்தில் இவ்விரு மாலுமிகளின் இருப்பிடம் பற்றிய அவர்கள் அளித்த செய்தியினை FBI அதிகாரிகள் டென்மார்க் நாட்டிடமிருந்து உடனடியாக ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை. இவர்கள் உண்மையிலேயே டியரிங் கப்பலில் பணி புரிந்து மாயமாய் மறைந்தவர்களா? தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;12 ஜீலை 1921 அன்று துருக்கி தூதரகத்திலிருந்து வந்த தந்தி, ஹ¥விட்டில் பயணம் செய்ததாய் கருதப்படும் ரைய்னி என்பவன் கிரேக்க கப்பலான மெகாலி ஹெல்லாஸ் மூலம் நியூயார்க் வருகின்றானென்று தெரிவித்தது. இவன்தான் ஹ¥விட் பயணப்பட்டியலில் இருந்த B.O. ரெய்னியா? ஆமாம் அவனேதான். நியூயார்க்கில் கிரேக்க கப்பல் வந்தடைந்ததும் இதை ரைனியிடமே FBI உறுதிப்படுத்திக் கொண்டது. ஆனால் என்னவொரு துரதிருஷ்டம்! ஹ¥விட் பயணம் செய்யும் 20 நிமிடத்திற்கு முன்னர் ரைனி உபாதை காரணம் காட்டி கப்பலிலிருந்து விலகிக் கொண்டான். ஹ¥விட் கப்பல் மறைந்த மர்மம் இன்னும் விலகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ரோந்துக்கப்பலில் ஜேகப்ஸனோடு பேசியதாக அறியப்படும் டியரிங் கப்பலின் பின்லாந்தைச் சேர்ந்த செந்நிற முடியோன் ஜான் பிரெடரிக்ஸனோ, எஞ்சினியரான பேட்ஸைப் பற்றியோ தகவல்களேதுவும் அமெரிக்காவிற்கு கிட்டவில்லை. ஆனால் கலகக்காரனென நம்பப்படும் மெக்லெல்லன் பெயர் டியரிங் தரை தட்டிய ஒரு மாத காலத்திற்குப் பின்பு கிட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;சிரில் மெக்லெல்லன் (டியரிங் கலகக்காரன் பெயர் சார்லஸ் மெக்லெல்லன் இரண்டுமே 'C'ல் தொடங்குபவை) என்பவன் மாலுமி நிபுணத்துவத்தில் தேர்ச்சி பெற்றதாக 20 மார்ச் 1921'ல் போர்ட்லாந்து நீராவி ஆய்வாளர் கழகத்தால் பட்டம் அளிக்கப்பட்டான். யாரிந்த சிரில் மெக்கெக்கன் என்று அமெரிக்காவின் நீதித்துறை விசாரணை மேற்கொண்டது. விசாரணையில் அவனது முகவரி மாலுமிகளின் சங்கத்தைச் சேர்ந்ததென்று கண்டுபிடிக்கப்பட்டது. சிரில் மெக்லெல்லன் இப்போது எங்கே? அவன்தான் சார்லஸ் மெக்லெல்லனா? இன்றும் இது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்ட தகவல்களை வைத்து டியரிங்கில் என்ன நடந்திருக்கலாமென்று ஒத்துக் கொள்ளக்கூடிய யூகமொன்று தெரிவிக்கப்படுகின்றது. மெக்லெல்லன் ரோமலைக் கொன்றிருக்க வேண்டும். பின்னர் எஞ்சினீயரான பேட்ஸை சிறை செய்திருக்க வேண்டும். பிரெடரிக்ஸன் நுழைத்தளத்திலிருந்து ரோந்துக்கப்பலை விளித்தது இதை உறுதிப்படுத்துகின்றது. ஏனெனில் ரோமல், பேட்ஸ், மெக்லெல்லனுக்கு அடுத்த அதிகாரி பிரெடரிக்ஸன்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கப்பலின் பயண வழித்தடம் 23 ஜனவரிவரை (டியர்ங் தரையைத் தட்ட 8 நாட்களுக்கு முன்பு வரை) ரோமலால் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் 80 மைல் தொலைவுள்ள டயமண்ட் ஷோலில் டியரிங் முட்டி நின்றது. கப்பலின் பாய்களனைத்தும் விரிக்கப்பட்ட நிலையில் 80 மைல் தொலைவை அக்கப்பல் வெகுசீக்கிரம் எட்டியிருக்க வேண்டும். இவ்வளவு காலதாமதத்திற்கு காரணமென்ன? இக்காலகட்டத்தில்தான் வோர்மல் கொல்லப்பட்டிருக்க வேண்டும். கைப்பற்றப்பட்ட டியரிங் பயண வரைபடத்தில் 23 ஜனவரிக்குப் பிறகு வேறொருவரின் கையெழுத்திருப்பது இதை உறுதி செய்கின்றது. அப்படியென்றால் கலகக்காரன் எட்டு தினங்களில் என்ன செய்திருப்பான்? அடுத்த நடவடிக்கைள் பற்றி யோசித்துக் கொண்டிருந்தானா? தனியருவனாய் அவனால் மிஞ்சிய குழுவைக் கட்டுப்படுத்த முடிந்திருக்குமா? அவனுக்கு துணையாய் மற்றவரும் இருந்திருப்பாரா?&lt;br /&gt;&lt;br /&gt;வோர்மலைக் கொன்றபின் எஞ்சியோரை துப்பாக்கி முனையில் மெக்லெல்லன் நுழைவாயிலில் பிணைத்திருக்கலாம். அதைத்தான் ரோந்துக் கப்பலிலிருந்து ஜேகப்ஸன் பார்த்து வியந்திருக்கலாம். ஏனெனில் கப்பலின் நுழைவாயில் தளத்தில் பொதுவாக அதிகாரிகளே தென்படுவர்.&lt;br /&gt;&lt;br /&gt;டியரிங் பற்றி லேக் ஈலோன் என்ற கப்பலில் இருந்து வந்த செய்தி மேற்சொன்ன யூகத்திற்கு வலுவூட்டியது. 'டியரிங் கப்பல் தவறான பாதையில் செல்வது போல் தான் கருதுவதாக' அக்கப்பலின் கேப்டன் தகவலனுப்பியிருந்தார். ரோமலைக் கொன்றபின் பேட்ஸ், மெக்லெல்லனை எதிர்த்துப் போராடியிருக்கலாம். அதனால் அதீத காயமும் அடைந்திருக்கலாம். கலகத்துக்குண்டான காரணத்தையோ, அதன் பின் விளைவுகளையோ மெக்லென்னன் மற்றும் சக குழுவினரால் சட்டத்தின் முன் நியாயப்படுத்த முடிந்திருக்காது. டியரிங் குறித்தபடி போர்ட்லாந்து கரையை அடைந்தபின் மெக்லெல்லனும் அவனுக்கு உதவியவர்களும் அதற்குண்டான தண்டனையை அடைந்தே தீருவார்கள். அதனால் எஞ்சிய குழுவினர் அவசரகால படகுகள் மூலம் முன்னரே தப்பித்திருக்கக் கூடும். பின்னர் டயமண்ட் ஷோலில் டியரிங்கை தரை தட்ட வைத்து மெக்லெல்லன் அதே முறையில் தப்பியிருக்கலாம். அப்போதுதான் லேக் ஈலோனின் கேப்டன் டியரிங்கை பார்த்திருக்க வேண்டும். கடைசியாக மெக்லெல்லன் டியரிங்கை விட்டு தப்பிச் செல்லுமுன் கப்பலின் சுக்கானை ஒன்பது பவுண்ட் சம்மட்டியால் அடித்து நொறுக்கியிருக்கக்கூடும். தப்பிப் பிழைத்த அனைவரும் புதிய பெயரில் உலகில் உலா வந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றும் வடக்கு கரோலினா மாநில கடற்கரையில் பேய்க்கப்பல் என்றழைக்கப்படும் டியரிங்கின் எஞ்சிய பிண்டங்கள் இறைந்து கிடக்கின்றன. தமது மர்மங்களை எடுத்துக் கூறாது 'உன்னால் இம்முடிச்சை அவிழ்க்க முடியுமா' என்ற அப்பிண்டங்கள் கூவுவது போலுள்ளது.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7146427-110792612469501968?l=ravichandrika.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ravichandrika.blogspot.com/feeds/110792612469501968/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7146427&amp;postID=110792612469501968' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7146427/posts/default/110792612469501968'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7146427/posts/default/110792612469501968'/><link rel='alternate' type='text/html' href='http://ravichandrika.blogspot.com/2005/02/7.html' title='சரித்திரப் பதிவுகள் - 7'/><author><name>Vanthiyathevan</name><uri>http://www.blogger.com/profile/11863726847622025741</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7146427.post-110318970254368514</id><published>2004-12-16T01:29:00.000-08:00</published><updated>2004-12-16T01:50:55.903-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;strong&gt;சரித்திரப் பதிவுகள் - 6 : நார்மண்டி தாக்குதல் (D Day Landing)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ்மணத்தில் முன்னூறாவது வலைப்பதிவாக சேர்ந்ததில் பெருமகிழ்ச்சி!!! காசியவர்களுக்கு நன்றி!!!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=vanthiyathevan&amp;pid=244998&amp;amp;sid=iRY41ORSX4" border="0" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-- மிதக்கும் பீரங்கி&lt;br /&gt;&lt;br /&gt;"பல மாதங்களாகக் காத்திருந்த நீங்கள் தலைசிறந்த புனிதப் போரினை மேற்கொள்ளப் போகின்றீர்கள்...உங்கள் பணி எளிதானதல்ல. எதிரிகள் தக்க பயிற்சியுடனும், தேவையான தளவாடங்களுடனும், போர்களினால் விளைந்த திண்மையுடனும் எதிர்கொள்வார்கள். மிகுந்த மூர்க்கத்தனத்துடன் போரிடுவார்கள்..."&lt;br /&gt;--- ட்வைட்.டி.ஐஸ்சனோவர் (06 ஜீன் 1944, நேசப்படைகளின் தலைமைத் தளபதி)&lt;br /&gt;&lt;br /&gt;பிரான்சை ஜெர்மனியின் நாஜிப்படை ஆக்ரமித்திருந்த காலம். உலகத்திலேயே மிகப்பெரிய ஆக்ரமிப்பு படை 'ஓவர்லார்டு நடவடிக்கை (Operation Overlord)' மூலம் ஜெர்மனியைத் துரத்த தயாரானபோது, நேசப்படைகளின் தலைமைத் தளபதி ஐஸ்சனோவர் வீரர்களிடம், உரை நிகழ்த்தினார். மேற்கோளிடப்பட்ட அவரது பேச்சிலிருந்தே இம்முயற்சி எத்தகைய அபாயகரமானதென்று உங்களுக்கு விளங்கியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;"ரேங்க் பேதமின்றி, அலையலையாக, 20 மைல்கள் பரந்து, ஐந்தாயிரம் போர்க்கப்பல்கள் புடைசூழ அவர்கள் (நேசப்படையினர்) வந்தார்கள். புதிய வேகம் பெற்ற வாகனாதிகள், துருப்பிடித்த சரக்குக் கப்பல்கள், நீராவிக் கப்பல்கள், மருத்துவக் கப்பல்கள், எரிபொருள் ஏந்திய டாங்கர்கள், கப்பலை இழுக்கும் சிறிய படகுகள் அவற்றுள் அடங்கும். 350 அடி நீளம் கொண்ட துருப்புகள்/தளவாடங்களை கரை சேர்க்கும் கலங்கள்... இவையனைதிற்கும் முன்னே கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள், கரையோரப் பாதுகாப்புக் கப்பல்கள், திசை காட்டும் கருவிகள் விதைக்கும் கலங்கள் சென்று கொண்டிருந்தன. பல்லாயிரக்கணக்கான போர்விமானங்கள் மேகத்திற்கு தாழப் பறந்தன." (Cornelius Ryan in his book 'The Longest Day).&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கூறிய பத்தி சுருக்கமாக யுத்ததிற்கு சென்ற நேசப் படைகளின் பரிமாணத்தை விளக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கிழக்கு மற்றும் மேற்கே நாஜிப்படைகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1939-41'ல் செய்த போர்களினால் மேற்கு ஐரோப்பாவும், 1942 சண்டையில் கிடைத்த ரஷ்யாவின் பெரும்பகுதிகளும் ஹிட்லரின் பிடியிலேயே தொடர்ந்தன. நடுநிலை நாடுகளான ஸ்வீடன், போர்ச்சுகல், ஸ்விட்ஜர்லாந்து மற்றும் ஸ்பெயின் தவிர ஏனைய ஐரோப்பா முழுதையும் நாஜிப்படைகள் ஆக்ரமித்திருந்தன. வட ஆப்பிரிக்காவும் அவர்கள் பிடியிலிருந்து தப்பவில்லை. கிழக்கே ரஷ்யாவின் ஸ்டாலின்கிராடு, குர்ஸ்க் போன்ற பகுதிகளில் நடந்த எதிர்ப்பு சண்டைகளால் சிறிதே ஜெர்மனி பின்வாங்கியது. இருப்பினும் மேற்கிலிருந்து அமெரிக்காவும் இணைந்து இரண்டாவது முனைத் தாக்குதல் தொடுத்தாலொழிய ஜெர்மனியைத் தோற்கடிக்க முடியாதென்று நேச நாடுகளுக்குப் புரிய ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இரண்டாவது முனை&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ரஷ்யாவின் ஜோசப் ஸ்டாலின், தனது சகாக்களான வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் ப்ராங்க்ளின் ரூசோவெல்ட் இருவரிடமும் மேற்கிலிருந்து இரண்டாவது முனைத் தாக்குதலை ஆரம்பிக்கச் சொல்லி வலியுறுத்த ஆரம்பித்தார். ஹிட்லரும் 11 டிசம்பர் 1941'ல் அமெரிக்கா மீது போர் பிகடனம் செய்தார். அமெரிக்க ஜனாதிபதியான ரூசோவெல்ட் தனது நம்பகமான தளபதியான ஐஸ்சனோவரை அழைத்து, நேசப் படைகளின் வெற்றிக்கான வழிமுறையைக் காண கட்டளை பிறப்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1943'ல் ஐஸ்சனோவர் இரு நடவடிக்கைகளை பிரஸ்தாபித்தார். அவையாவன: Operation Roundup மற்றும் Operation Sledgehammer. இவற்றுள் முதல் நடவடிக்கையை இங்கிலாந்து ஆதரித்தது. இருப்பினும் Operation Torch என்று வடஆப்பிரிக்காவிலுள்ள நாஜிப்படைகளை முதலில் அழித்தொழிக்க வேண்டுமென்று புதிய யோசனையையும் முன் வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இக்குழப்பத்திலேயே காலம் கடப்பதைக் கண்டு பதறிய ரூசோவெல்ட்டும், ஸ்டாலினும் டெஹ்ரானில் நடந்த சந்திப்பில் மே 1944'ல் ஜெர்மனிக்கெதிரான மேற்குமுனைத் தாக்குதல் தொடங்க வேண்டுமென்று கறாராக சர்ச்சிலிடம் தெரிவித்தனர். பதிலாக ஸ்டாலின் கிழக்கு முனைப் போரை மும்முரமாக செயல்படுத்துவதாகவும், ஜெர்மனியை வென்ற பிறகு ஜப்பானுக்கெதிரான போரில் நேசப்படைகளோடு பங்கு பெறுவதாகவும் வாக்குறுதியளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஓவர்லார்டு நடவடிக்கை (Operation Overlord)&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;முதலில் லெப்டினென்ட் ஜெனரல் பிரட்டெரிக் மோர்கன் நேசப்படைகளின் தலைமைத் தளபதியாக அறிவிக்கப்பட்டார். அவர்தான் ஓவர்லார்டு நடவடிக்கையின் சூத்திரதாரி. ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரான்ஸின் நார்மண்டி பகுதியில் தாக்குதல் தொடுக்க வேண்டுமென்று தனது கருத்திற்கு செயல் வடிவமும் கொடுத்தார். பின்னர் ஐஸ்சனோவர் ஜனவரி 1944'ல் நேசப்படைகளின் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னைத் தோற்கடிக்க நேசப்படைகள் இருமுனைத்தாக்குதல் தொடுக்கலாமென்று ஹிட்லரும் கணித்திருந்தார். அதனால் பிரான்ஸில் நாஜிப்படைகளின் தற்காப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு தனது தளபதியான எர்வின் ரொம்மலை ஏவினார். நேசப்படைகளும் ரொம்மலை எதிர்த்து ஆப்பிரிக்க பாலைவனங்களில் போரிட்ட பெர்னார்டு லா மாண்ட்கோமரியை, ஐஸ்சனோவர்க்கு உதவியாக நியமித்தது. மேலும் வால்டர் ஸ்மித் என்னும் அமெரிக்கர் பிரதானத் தளபதியாகவும், இங்கிலாந்து தரப்பில் ஏர் சீப் மார்ஷல் ஆர்தர் டெட்டர், அட்மிரல் பெர்ட்ராம் ராம்சே, ஏர் சீப் மார்ஷல் டிராப்போர்டு லே-மலோரி ஆகியோரும் ஐசனோவர்க்கு துணையாக உதவி புரிய அனுப்பப்பட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நார்மண்டி பகுதி மொத்தம் 5 கடற்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. உடா, ஓமகா, கோல்டு, ஜுனோ மற்றும் ஸ்வார்டு போன்ற கடற்கரைகளில், மொத்தம் ஐந்து தரைப்படை ஸ்குவார்டன்கள் (2 அமெரிக்கா, 2 இங்கிலாந்து மற்றும் 1 கனடா) மூலம் தாக்குதல் நடத்த தீர்மானிக்கப்பட்டது. D Day (தாக்குதலின் முதல் நாள்) நார்மண்டியின் மேற்கு முனையில் 2 அமெரிக்க விமானப்படைப் பிரிவுகளும், இங்கிலாந்தின் ஒரு விமானப்படைப் பிரிவு அதன் கிழக்கு முனையிலும் தாக்குதல் தொடுக்கமாறு முடிவாகியது. எதிரிக்கு வியப்பைத் தரும் வண்ணம் 'நீந்தும் டாங்குகள்' பயன்படுத்தவும் முடிவானது. இந்நடவடிக்கைக்கு முதல் மூன்று வாரத் தேவையாக 2,00,000 ஊர்திகளும், 6,00,000 டன் சரக்குகளும் மொத்தம் 6,500 கப்பல்கள் மூலம் எடுத்துச் செல்ல பெரிய திட்டம் தீட்டப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வான்வெளித் தாக்குதல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாக்குதலின் முதல் கட்டமாக 13,000 போர்விமானங்கள் ஜெர்மனிப்படை மீது குண்டு பொழியத் தயாராக இருந்தன. நாஜிப்படையோ பதில் தாக்குதலுக்கு வெறும் 400 போர்விமானங்களே தயாரான நிலையில் கொண்டிருந்தது. நேசப் படை விமானங்களின் குண்டு மழையில் பிரான்ஸின் புகைவண்டி நிலையங்கள், சாலைகள், நாஜிப் படைகள் பயன்படுத்தும் விமான நிலையங்கள், ரேடார் கண்காணிப்பு நிலையங்கள், கரையோர பீரங்கிகள் மற்றும் பாலங்கள் அனைத்தும் கடுமையாக சேதமுற்றன. இவ்வான்வெளி தாக்குதலே நேசப்படைகளின் வெற்றிக்கு அடிகோலியதெனலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இத்தாக்குதல் நார்மண்டி பகுதியை குறிவைத்து நடக்காமல் ஏனைய இடங்களில் பரவியிருந்தமையால், நேசப்படைகளின் கடல்வழி தாக்குதல் இடம் பற்றி ஜெர்மனி குழம்பியது. இது போதாதென்று கடல் தாக்குதல் நார்மண்டியிலில்லை என்று வேண்டுமென்றே ஜெர்மன் உளவு ஸ்தாபனத்திற்கு நேசப்ப்படை தவறான துப்பு கொடுத்தும் குழப்பியது. ஜெர்மனியின் சங்கேத செய்திகளை துல்லியமாக இனங்கண்டதால், நாஜிக்களின் எதிர்தாக்குதல் பற்றிய அனைத்து தகவல்களும் முன்கூட்டியே நேசப்படைக்கு தெரிந்தும் விட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிட்லருக்கு மட்டும் ஏனோ நார்மண்டிப் பகுதி தாக்கப்படலாமென்று கடைசி நிமிடத்தில் தோன்றியது. ஆனால் அதற்குள் காலம் கடந்து விட்டிருந்தது. ரொம்மலோ தேவையில்லாத கடற்கரைப் பகுதிகளிளெல்லாம் 40 லட்சம் கண்ணி வெடிகளைப் புதைத்து, நேசப்படைகளை எதிர்காண ஆவலாயிருந்தார். இதற்கு நடுவே ரொம்மலுக்கும் அவரது மூத்த அதிகாரியான Rundstedt'க்கும் டாங்க்குள் நிறுத்துமிடங்களில் கருத்துப் பேதமேற்பட, ஹிட்லரே தலையிட்டு பிரச்ச்சினையை சீர் செய்ய வேண்டியதாயிற்று. நேசப்படைகளின் தாக்குதல் ஆரம்பித்த போது ரொம்மல் விடுப்பில் இருந்ததுதான் பெரிய வேடிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஹோபார்ட்டின் பீரங்கிகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாதுகாப்பு அரண் கொண்ட கடற்கரையில் மொத்தம் இரு வழிகளில் துருப்புகளை இறக்கலாம். கடற்கரையில் தொடர் குண்டுமழை பொழிந்து, அதே நேரத்தில் தாக்குதல் படையினை கரைக்கு அருகே எவ்வளவு தூரம் உள்ளே வர முடியுமோ அவ்வளவு தூரம் வந்து துருப்புகளை இறங்கச் செய்யலாம். இச்செய்கையினால் உயிர்ச் சேதம் மட்டுப்படும். இம்முறையினைத்தான் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க கடற் கமாண்டோக்கள் அடிக்கடி பயன்படுத்துவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடல் வற்றுதலின் போது (low tide) துருப்புகளை கடற்கரையில் துருப்புகளை இறக்குவது இரண்டாவது முறையாகும். கரையில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகளை பாதுகாப்பாக அகற்றுவதற்கு இம்முறை உகந்ததென்றாலும், உயிர்ச் சேதம் அதிகமாக வாய்ப்புண்டு. கரையினருகே வரவேண்டிய தேவையில்லாததால் கலங்களுக்கு அதிக ஆபத்தில்லை.&lt;br /&gt;ஜெர்மனியின் பாதுகாப்பு அரண் மிகப் பலமாக இருந்த காரணத்தால் நேசப் படைகள் இரண்டாவது முறையினையே தேர்ந்தெடுத்தது. முதல் முறைப்படி கடல் ஏற்றத்தின் (high tide) போது தாக்குதல் தொடுத்திருந்தால் அரணிலிருந்த நாஜிக்கள் குருவியைச் சுடுவது போல் நேசப்படையினரையும், கலங்களையும் அழித்திருப்பார்கள். கரையிறங்கும் காலாட்படையோடு (infantry) அதிக டாங்குகளையும் அனுப்பினால் ஜெர்மனியின் பாதுகாப்பு அரணைத் தகர்க்கமுடியுமென்று திண்ணமாக நேசப் படை நம்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தாக்குதலுக்கு முன்னர் இங்கிலாந்தின் தரைப்படைக்கு நவீன குண்டுதுளைக்கா கவச டாங்க்குகள் பிரிவினை உண்டாக்கும் பணியில் மேஜர் ஜெனரல் பெர்சி ஹோபார்ட் ஈடுபட்டிருந்தார். இவரது கொள்கைகளை 'கொமாளித்தனமென்று' சிலரும், 'மிகப்புதுமையானதென்று' சிலரும் தீவிர கருத்து பேதங்களோடு விவாதித்த காலத்தில், இனம்புரியாத காரணங்களுக்காக ஹோபார்ட்டுக்கு படையிலிருந்து கல்தா கொடுக்கப்பட்டது. ஆனால் ஹோபார்ட்டின் திறமை குறித்து சர்ச்சிலுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. D Day நடவடிக்கைக்காக மீண்டும் ஹோபார்ட் அழைக்கப்பட்டார். 79'தாவது கவசவண்டிகள் பிரிவின் தலைவராய் ஹோபார்ட் ஆற்றிய பணி அளவிடமுடியாதது. இவர் உருவாக்கிய கவச டாங்குகள் பல நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. இவரது கண்டுபிடிப்புகளில் 'ஆர்க்ஸ்' எனப்படும் பாலமைக்கும் டாங்குகள், 'ஷெர்மன் DD [Duplex Drive]' எனப்படும் நீந்தும் டாங்குகள், 'கிராப்' எனப்படும் கண்ணிவெடியகற்றும் டாங்குகள், 'பாப்பின்ஸ்' எனப்படும் பாதையமைக்கும் டாங்குகள், சர்ச்சில் எனப்படும் தீ உமிழும் டாங்குகள், 'பேசைன்ஸ்' எனப்படும் மதகமைக்கும் டாங்குகள் போன்றவை அடங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓவர்லார்டு நடவடிக்கையில் நீந்தும் டாங்குகளின் பணி மகத்தானது. ஷெர்மன் வகை டாங்குகளுக்கு தண்ணீர் புகா கேன்வாஸ் அரண் கொடுத்து, இரு முன் தள்ளிகளும் (propellars) பொருத்தப்பட்டன. கரையிறக்கும் கலங்கள் (Landing craft) மூலம் இவ்வகை டாங்குகள் கரைக்கருகே எடுத்துச் செல்லப்பட்டன. 4-5 கீமீ தூரமிருக்கையில் டாங்குகள் கலத்திலிருந்து கடலில் இறக்கப்பட, அவை நீந்தி கரையினை அடைந்தன. பின்னர் கான்வாஸ் உறையின் காற்று நீக்கப்பட்டு போர்முனையில் சீறிப்பாய்ந்தன. கடற்கரையில் துருப்புகளை மட்டுமே எதிர்பார்த்த ஜென்மானியர்க்கு DD டாங்குகள் 'அதிர்ச்சி வைத்தியம்' அளித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஓமகா கடற்கரை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;D Day'ல் இங்குதான் உக்கிரமான போர் நிகழ்ந்தது. மற்ற நான்கு கடற்கரைகளைவிட ஓமகா பெரியது. மேலும் கடற்கரையில் சிறிய மலைக்குன்றுகள் அமெரிக்கப் படைகளின் தாக்குதலை கடினமாக்கியது. ரொம்மலும் தன் பங்கிற்கு 'டிராகன் பற்கள்' என்று பெயரிட்டு பாதுகாப்பை பன்மடங்கு பலப்படுத்தியிருந்தர். மலைக்குன்றுகளில் 'எதிர்ப்புக் கூடுகளை' ஏற்படுத்தியதோடு, படைகளின் இலகுவான நடமாட்டத்திற்காக பதுங்கு குழிகளையும் வெட்டி வைக்க ஆணைகள் பிறப்பித்தார். அமெரிக்கப் படைகளை எதிர்நோக்கி ஜெர்மனியின் பீரங்கிகள் ஓமகா கடற்கரையில் வெறியுடன் காத்திருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஓமர் பிராட்லி தலைமையில் அமெரிக்காவின் முதலாம் தரைப்படை ஓமகா கடற்கரையை வந்தடைந்தது. துரதிருஷ்டவசமாக ஏவப்பட்ட 32 DD டாங்குகளில் 29 மூழ்கிப்போனது (27 தான் மூழ்கியதென்று சொல்வோருமுண்டு). எதிர்பாராமல் வீசிய ஆறடி உயர அலைகள், துருப்புகளோடு டாங்குகளை மூழ்கடிக்கச் செய்துவிட்டன. மேலும் கவச டாங்குகளின் துணையில்லாமல் கரையேறிய அமெரிக்க வீரர்களின் நிலை இன்னும் மோசமானது. இது பற்றாதென்று பலமாக வீசிய காற்று கரையிரக்கும் கலங்களை அலைக்கழித்தது. இதனால் குறித்த இடத்தில் துருப்புகள் வந்தடைய முடியவில்லை. கரையை எட்டிய பின்னர் எப்பிரிவு எங்கே செல்ல வேண்டுமென்ற குழப்பம் அதிகரித்தது. ஜெர்மனியின் தானியங்கி துப்பாக்கி ரவைகள் சந்தோஷமாக அமெரிக்கர்களை துளைத்தெடுத்தன. கடற்கரையினருகே ஏற்பட்டிருந்த மணற்மேடுகள் அமெரிக்கர்களுக்கு சிறிதே பாதுகாப்பளித்தாலும், கடலிலிருந்து அவற்றை சென்றடையுமுன் பலர் குண்டுகளுக்கு மரித்துப் போனார்கள். நமது கார்கில் யுத்தத்தில் நடந்தது போல் அமெரிக்க வீரர்கள் உயிரை பணயம் வைத்து மலைகுன்றுகளில் ஏறி வீரமாகப் போரிட்டனர். மேலும் சிறிய கப்பல்களை கரைக்கு மிக அருகே வர வைத்து ஜெர்மனியின் பீரங்கிகளை பதம் பார்த்தார்கள். ஒரே நாளில் இங்கே பலியான அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை சுமார் 2,400. காலை 6:30 மணிக்கு ஆரம்பித்த யுத்தத்தில் நண்பகல் தாண்டியவுடன் அமெரிக்கர்களின் கை ஓங்க ஆரம்பித்தது. இருள் சூழும் நேரத்தில் கிட்டத்தட்ட ஓமகாவை அமெரிக்கா பிடித்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;உடா கடற்கரையில் ஏவப்பட்ட 32 DD டாங்குகளில் 28 கரை சேர்ந்தது. மற்ற கடற்கரைகளிலும் DD டாங்குகளின் பங்களிப்பு மகத்தானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கோப்ரா நடவடிக்கை (Operation Cobra)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;25 ஜூலை அன்று அனைத்து கவச டாங்க்குகளையும் மேற்குப் பகுதியில் இங்கிலாந்தின் தரைப்படையை சமாளிக்க ஜெர்மனி அனுப்பியது. இது போதாதா? நேசநாடுகளின் துரிதப்படை (Expeditionary Force) கோப்ரா நடவடிக்கை என்னும் வான்வெளித்தாக்குதலைத் தொடுத்தது. இத்தாக்குதலால் இங்கிலாந்தை சமாளிக்கச் சென்ற நாஜிப்படை பிளவுபட்டது. சந்து முனையில் சிந்து பாட அமெரிக்காவின் தரைப்படை கிடைத்த இடைவெளியில் புகுந்து கொண்டது. இப்போது நார்மண்டியில் எஞ்சியிருந்த நாஜிக்களை இப்படைபின்னாலிலிருந்து தாக்கி சின்னாபின்னமாக்கியது. ஹிட்லரின் ஆணைகள் சுத்தமாக மொழி பெயர்க்கப்பட்டதால் ஜெர்மனியின் பதில் தாக்குதலும் விலைவுகள் ஏதுமின்றி பிசுபிசுத்துப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாஜிப்படை தலைமையின் கதி&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஜெர்மனியின் ஏழாவது தரைப்படையின் கமாண்டர் டால்மேன் 28 ஜூன் அன்று இறந்துபோனார். மாரடைப்பென்று காரணம் சொன்னாலும் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாமென்று ஊகம் நிலவியது. யுத்தத்தில் ஜெர்மனி தோற்றுவிடுமாகையால் நேசப்படைகளுடன் அமைதிப் பேச்சு நடத்துங்கள் என்று ஹிட்லருக்கு அறிவுரை கூறியமையால் Rundstedt 'தற்கொலை' செய்து கொள்ள நேரிட்டது. இதற்கு நடுவே நாஜிப்படை அதிகாரிகள் சிலர் 20 ஜூலையன்று கிழக்கு பெர்ஷ்யியன் தலைமையகத்தில் ஹிட்லரைக் கொல்ல செய்த சதி தோல்வியில் முடிந்தது. Rundstedt இடத்தில் வந்த Gunther Von Kluge என்பவரும் இதே கருத்தைக் கூற 18 ஆகஸ்ட் அன்று தற்கொலை செய்து கொள்ள நேரிட்டது. இங்கிலாந்து வீரரின் தாக்குதலில் சிக்கி காயமுற்ற ரொம்மல் அக்டோபரில் தற்கொலை செய்துகொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இன்றைய நார்மண்டி&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஏறத்தாழ இரண்டு லட்சம் கட்டிடங்கள் சண்டையில் சிதிலமாகின. கேன் பகுதி ஒரு கற்குவியலாகவே காட்சியளித்தது. மொத்தம் 15,000 வீடுகளில் 9,000 வீடுகள் குண்டுவீச்சினில் தரைமட்டமானது. போருக்குப் பின்னர் வந்த அரசுகள் 'வெற்று அரசியலிலேயே' காலம் கழிக்க, பிரான்ஸின் அதிகார வர்க்கம் விழித்துக் கொண்டது. அமெரிக்க நிதியுதவியோடு உள்ளூர் மக்களின் உழப்பினையும் ஒருங்கிணைத்து, 1951'ல் கிட்டத்தட்ட நார்மண்டியை பழைய நிலைமைக்கு கொண்டுவந்தனர். 1954'ல் கேன் நகரமும் புனரமைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நினைவுச் சின்னங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியருக்குத்தான் நாட்டுப்பற்று என்பது தவணை முறையில் வரும். இலங்கை சென்ற இந்திய அமைதி காக்கும் படையில் இறந்தவரை சுலபமாக மக்களும், அரசாங்கமும் மறந்து விட்டது. கார்கில் போரிலே காயம்பட்டவரையும் ஞாபகம் வைத்துள்ளார்கள். ஆனால் பிரான்ஸ¤ தேச மக்கள் அவ்வாறில்லை. 'தனது பழமையினை மறந்த எந்த தேசத்திற்கும் எதிர்காலமில்லை' என்று முழங்கிய சர்ச்சிலின் தேசமான இங்கிலாந்து மக்களும் தேசப்பற்றிற்கு பேர் போனவர்கள். அமெரிக்காவைப் பற்றி கேட்கவே வேண்டாம். அமெரிக்க மக்கள் வியட்நாம் யுத்தத்தை மிகவும் எதிர்த்தனர். இருப்பினும் அமெரிக்கர் பலர் இப்போரில் பங்குகொண்டு இறந்து போன மற்றும் காயம்பட்ட வீரர்களை மறந்துவிடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நார்மண்டி படையெடுப்பில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் இறந்தனர். பிணக்குவியலாயிருந்த 9,000 அமெரிக்க வீரர்களின் உடல்களை பிரித்தெடுத்து ஓமகா கடற்கரைக்கு அருகே செயிண்ட் லௌரண்ட் என்னுமிடத்தில் அடக்கம் செய்தனர். லா காம்பே என்னுமிடத்தில் சுமார் 20,000 ஜெர்மனி வீரர்கள் அவ்வாறே அடக்கம் செய்யப்பட்டனர். ரான்வில் என்னுமிடத்தில் சுமார் 2,000 இங்கிலாந்து வீரர்களுக்கு சமாதிகள் உருவானது. நேச நாடுகளைத்தும் ஒவ்வொரு வருடமும் உயிர்த்தியாகம் புரிந்த இவ்வீரர்களை நன்றியோடு நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நார்மண்டியில் பல தரப்பட்ட மக்கள் விஜயம் செய்கின்றனர். இறந்த தோழர்களின் நினைவாகவும், உயிரோடு மீண்டவர் ஒன்று கூடவும், வரலாற்று சிறப்புமிக்க இடத்தை காணும் ஆவலிலும் என்று பார்வையாளர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7146427-110318970254368514?l=ravichandrika.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ravichandrika.blogspot.com/feeds/110318970254368514/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7146427&amp;postID=110318970254368514' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7146427/posts/default/110318970254368514'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7146427/posts/default/110318970254368514'/><link rel='alternate' type='text/html' href='http://ravichandrika.blogspot.com/2004/12/6-d-day-landing.html' title=''/><author><name>Vanthiyathevan</name><uri>http://www.blogger.com/profile/11863726847622025741</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7146427.post-108796647013380025</id><published>2004-06-22T21:49:00.000-07:00</published><updated>2004-06-22T21:54:30.133-07:00</updated><title type='text'></title><content type='html'>காணாமல் போய்விடவில்லை நேயர்களே! படங்கள் பார்க்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன். உங்களை படங்களோடு மகிழ்விக்க புதிய இடத்திற்கு குடி பெயரப் போகின்றேன். அதற்கான வேலையில்தான் இவ்வளவு நாள் சந்திக்க முடியாமல் போனது. &lt;br /&gt;&lt;br /&gt;இன்று பிரிவோம். விரைவில் சந்திப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7146427-108796647013380025?l=ravichandrika.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ravichandrika.blogspot.com/feeds/108796647013380025/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7146427&amp;postID=108796647013380025' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7146427/posts/default/108796647013380025'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7146427/posts/default/108796647013380025'/><link rel='alternate' type='text/html' href='http://ravichandrika.blogspot.com/2004/06/blog-post.html' title=''/><author><name>Vanthiyathevan</name><uri>http://www.blogger.com/profile/11863726847622025741</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7146427.post-108647486713224877</id><published>2004-06-05T15:34:00.000-07:00</published><updated>2004-06-05T15:34:27.133-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;strong&gt;சரித்திரப் பதிவுகள் - 5&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.என்.எஸ். தரங்கினி&lt;/strong&gt;&lt;br /&gt;தரங்கினி என்ற வார்த்தை "தரங்" என்கின்ற ஹிந்தி வார்த்தையிலிருந்து வந்தது. தரங் என்றால் "அலைகள்". தரங்கினி என்றால் "அலையோடி" (Wave Rider). இது ஒரு யுத்தக் கப்பல் இல்லை. பாய்மரக் கப்பல் அதுவும் ஒரு பயிற்சிக் கப்பல் என்பது இதன் சிறப்பம்சமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;வடிவமைத்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த திரு. காலின் முட்டி. பிறந்தது கோவா கப்பல் கட்டுமிடத்தில். 11 நவம்பர் 1997'ல் கடற்படையில் சேர்ந்தது. மாலுமிகளுக்கு அடிப்படைப் பயிற்சி அளிப்பதே இதன் தலையாய பணி. நவீன யுகத்தில் பாய்மரக் கப்பலா?  &lt;br /&gt;&lt;br /&gt;கடற்பயணத்திற்கு முக்கியமாகத் தேவை வீரம், தோழமை மற்றும் சகிப்புத்தன்மை. இவ்வனைத்தும் பாய்மரக் கப்பலில், கடல் போல் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=tamilts&amp;pid=137392" alt="tarangini2" border=0&gt;&lt;br /&gt;ஐ.என்.எஸ். தரங்கினி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காற்றைப் பயன்படுத்தி உலகையே வலம் வரும் தன்மை இக்கலங்களுக்கு உண்டென்பது நமக்குத் தெரியாததல்ல. கடலில் ஒரு முறை பயணம் சென்று வாருங்கள். இப் பிரபஞ்சத்தில் நாம் ஒரு கொசு போலக் கூட இல்லை என்ற நிதர்சனம் புரியும். எனக்கு அதிகம் பயணப்பட வாய்ப்புகள் கிட்டவில்லை என்றாலும் இருமுறை ஏவுகணைக் கப்பலிலும், ஒருமுறை நீர்மூழ்கியிலும் கடலை அளந்து வந்தேன். அந்த அனுபவங்களை பின்னர் தொகுப்பதாய் சின்ன உத்தேசம்.&lt;br /&gt;&lt;br /&gt;18 பாய்களின் பரப்பு சுமார் 1000 சதுர மீட்டர். 6 அதிகாரிகளும், 20 மாலுமிகளும்தான் கப்பலின் குழு. 30 பயிற்சியாளர்களும் உடன் செல்ல முடியும். தரங்கினி இந்தக் குறுகிய காலத்தில் சாதித்தது என்ன? பார்ப்போமா?&lt;br /&gt;&lt;br /&gt;23 ஜனவரி 2003'ல் தனது மிகப்பெரிய கடற்பயணத்தை தரங்கினி தொடங்கியது. நோக்கம்: சமுத்திரங்கள் கடந்த நட்புப் பாலம் ("Bridging friendship across the oceans"). &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=tamilts&amp;pid=137391"  alt="tarangini_home" border=0&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தம் 18 நாடுகள், 36 துறைமுகங்களில் பாய் (கால்?) பதிப்பதோடு ஐம்பெரும் ஏரிகளில் ஒரு ரேஸிலும் கலந்து கொள்வதாய்பயணத்திட்டம். &lt;strong&gt;பார்க்க படம்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=tamilts&amp;pid=137390" alt="passage" width="700" height="400" border=0&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக யுத்தக்கப்பல்களே வெளிநாட்டுத் துறைமுகங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். தனது பராக்கிரமத்தைக் காட்ட. தரங்கினியின் நோக்கமோ மிகவும் புனிதமானது. தற்போதைய நாட்களில் மிகவும் தேவையான ஒன்றும் கூட...&lt;br /&gt;&lt;br /&gt;தரங்கினி இந்திய மாலுமிகளோடு மட்டுமின்றி வெளிநாட்டு அதிகாரிகளுக்கும் பயிற்சி அளித்தது. அந்த நாடுகளில் சில அமெரிக்கா, ஆஸ்திரேலியா, எகிப்து, பிரான்ஸ், இந்தோனேஷியா, இத்தாலி, மலேஷியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, ஸ்பெயின், தாய்லாந்து மற்றும் இங்கிலாந்து.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகமாகக் கதை(விடா)க்காமல், தரங்கினி பயணத்தின் ஹைலைட்ஸ்:&lt;br /&gt;&lt;br /&gt;* 458 நாட்கள் கடற் பயணம், 33,000 கடற் மைல்கள். ஒப்பு நோக்க வேண்டுமென்றால் கொலம்பஸ் விட்டாச்சு லீவு என்று 1492'ல் 8 மாதங்களில் 3,000 கடற் மைல்கள் கடந்தார். தரங்கினியோ சுமார் 15 மாதங்களில் 33,000 (11 மடங்கு) கடற் மைல்கள் கடந்தது.  &lt;br /&gt;* சுமார் 1000 பயிற்சி அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் பாடம் படித்தார்கள்&lt;br /&gt;* 30 கலங்கள் பங்கு கொண்ட அமெரிக்க ரேஸில் முதலிடம் (Youth Training Division Category)&lt;br /&gt;* "சர்வதேச நட்புணர்வு மற்றும் புரிந்து கொள்ளுதல்" என்ற கொள்கையை எந்தக் கப்பல் சிறப்பாகச் செயல் படுத்துகிறது என்ற வகையில் தரங்கினிக்கு முதலிடம்&lt;br /&gt;* 2003 விக்கி ஸ்காட் மெமோரியல் கோப்பை - தரங்கினியின் கேப்டனுக்கு (கமாண்டர் சௌகத் அலி)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=tamilts&amp;pid=137389" alt="kalam1" border=0&gt;&lt;br /&gt; திரு. கலாமுடன் கப்பற்குழு&lt;br /&gt;&lt;strong&gt;&lt;strong&gt;கேப்டனின் டைரிக்குறிப்பு&lt;/strong&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;It was during this epic voyage that the human spirit found its finest expression In an environment of challenge and adventure. It was a protracted voyage under a spread of canvas, where human skill and endeavour were pitted against the vagaries and raw energy of the elements of nature and finally emerged victorious &amp; triumphant!.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;படங்கள் : நன்றி இந்திய கப்பற்படை&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7146427-108647486713224877?l=ravichandrika.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ravichandrika.blogspot.com/feeds/108647486713224877/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7146427&amp;postID=108647486713224877' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7146427/posts/default/108647486713224877'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7146427/posts/default/108647486713224877'/><link rel='alternate' type='text/html' href='http://ravichandrika.blogspot.com/2004/06/5_05.html' title=''/><author><name>Vanthiyathevan</name><uri>http://www.blogger.com/profile/11863726847622025741</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7146427.post-108604020545008504</id><published>2004-05-31T14:46:00.000-07:00</published><updated>2004-05-31T14:59:42.193-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;strong&gt;சரித்திரப் பதிவுகள் - 4&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பி.என்.எஸ். (Pakistan Naval Ship) காஜி மூழ்கிய கதை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காஜியை மூழ்கடித்தது ராஜ்புத்தின் கடல் கண்ணிகள்தானா? வெடிச்சத்தம் மற்றும் ராஜ்புத் பயணித்த தேதி இரண்டையும் சீர்தூக்கி, மேற்கண்ட கருத்தை சில வல்லுநர்கள் மறுக்கிறார்கள். காஜியில் வெடிச்சத்தம் கேட்டது 3 டிசம்பர் 0:15 மணிக்கு. காஜியிலிருந்து மீட்கப்பட்ட கடிகாரமும் அதே மணித்துளியில் நின்று போய் விட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேளை தனது கண்ணி வெடிகளிலேயே சிக்கி காஜி அழிந்திருக்குமோ என்பது இரண்டாவது யூகம். கிட்டத்தட்ட 3 கண்ணிகளை 30 மீட்டர் ஆழத்தில், 150 மீட்டர் இடைவெளியில் விதைத்திருந்தது காஜி. இந்த வெடிகள் தனக்கு மேல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கப்பலோ, நீர்மூழ்கியோ கடந்தபின் வெடிக்கத் தயாராகிவிடும். அப்படிப் பார்த்தால் ராஜ்புத்தின் கண்ணி வெடிகள் காஜியின் வெடிகளைக் கடந்து சென்றிருக்கக்கூடும். அப்போது தயாரான காஜியின் வெடிகள், காஜியையே போட்டுத் தாக்கியிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கூற்றையும் முற்றிலுமாக ஏற்க முடியாது. காரணம் காஜியின் ஹல் வெளிப்புறமாக வாய் பிளந்து கிடந்தது. அப்படியென்றால் உள்புறமாக ஏதாவது வெடித்திருக்க வேண்டும். நீர்மூழ்கிகள் நீருக்கடியில் இயங்குவதற்கு பேட்டரிகளை பயன்படுத்தும். அந்த பேட்டரிகளை சார்ஜ் செய்யும்போது கணிசமாக ஹைட்ரஜன் வாயு வெளிப்படும். ஒரு சிறிய பொறி போதும். காஜியில் ஹைட்ரஜன் விபத்தால் வெடித்து மூழ்கியிருக்கலாம் தான். அப்படியேதேனும் நடந்திருந்தால் காஜியினுள்ளே கிடைத்த சடலங்கள் இன்னும் கருகியிருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் கண்ணி வெடி மட்டுமே காரணமில்லை என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது. காஜியின் உள்புறம் ஏதேனும் தீ விபத்து நிகழ்ந்த்திருக்கவும் சாத்தியக் கூறுகள் உள்ளன. அதுவும் நீரேவுகணைப் பகுதியில்யெனில் கேட்கவே வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=tamilts&amp;pid=134623" alt="Ghazi-SonarImage" width="400" height="238" border=0&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மூழ்கிய காஜி - சோனார் படம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆக மொத்தம் காஜி இவ்வாறு மூழ்கியிருக்கலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;1. விக்ராந்தை விசாகப்பட்டினத்தில் தேடிக்கொண்டிருந்த காஜி கண்ணி வெடிகளை விதைக்க ஆரம்பித்தது&lt;br /&gt;2. மூன்றாம் தேதி டிசம்பர் நள்ளிரவு லேசாக காஜி, தனது இடத்தையே இனங்கண்டு கொள்ள எட்டிப் பார்த்தது. &lt;br /&gt;3. அப்போது ராஜ்புத் கண்ணில் (பெரிஸ்கோப்) /காதில் (சோனார்) பட்டது. வேறு வழியின்றி போட்டது போட்டபடி (கண்ணிவெடிகளை) டுபுக்கென்று கடல் நோக்கி காஜி ஓடியது. ஏனெனில் துறைமுகத்திலிருந்து கடல் நோக்கி ராஜ்புத் மிக வேகமாக வந்து கொண்டிருந்தது.&lt;br /&gt;4. நீரிலிருந்து வந்த குமிழிகளைப் பார்த்த ராஜ்புத் எதற்கு வம்பென்று 2 கண்ணி வெடிகளை வீசிவிட்டுப் போனது&lt;br /&gt;5. இந்த வெடி காஜிக்கு மிக அருகே வெடித்டிருக்கலாம். ஏற்கெனவே அவசர டைவ் அடித்துக் கொண்டிருந்த காஜியில் இதனால் தீப்பிடித்திருக்கலாம். அல்லது காஜி பலமாகத் தரையை நோக்கித் தள்ளப் பட்டிருக்கலாம்.&lt;br /&gt;6. தீயானது டார்பிடோ மற்றும் மைன்ஸ்'ஐ அடைய காஜி அதோ கதியானது&lt;br /&gt;7. அல்லது ராஜ்புத் கண்ணிவெடியால் காஜியின் கண்ணிவெடி வெடிக்க, பின்னர் தீ விபத்தும் நடந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக பல "கலாம்" கருத்துக்கள் உலவினாலும், இந்தியக் கப்பற் படையின் மதிநுட்பமும், தந்திரமும், திட்டமிடுதலுமே காஜியை ஏமாற்றி, கடைசியில் 82 பேருடன் கவிழ்த்தது. விக்ராந்த் முழுசுதந்திரமாய் கிழக்கு பாகிஸ்தான் நடவடிக்கைகளில் பங்கு கொள்ள வழிவகையுமானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வாழ்க கப்பற்படை !!! ஒளிர்க இந்தியா !!! &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7146427-108604020545008504?l=ravichandrika.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ravichandrika.blogspot.com/feeds/108604020545008504/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7146427&amp;postID=108604020545008504' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7146427/posts/default/108604020545008504'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7146427/posts/default/108604020545008504'/><link rel='alternate' type='text/html' href='http://ravichandrika.blogspot.com/2004/05/4.html' title=''/><author><name>Vanthiyathevan</name><uri>http://www.blogger.com/profile/11863726847622025741</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7146427.post-108598332003554469</id><published>2004-05-30T22:58:00.000-07:00</published><updated>2004-05-31T14:42:30.233-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;strong&gt;சரித்திரப் பதிவுகள் - 3&lt;br /&gt;&lt;br /&gt;பி.என்.எஸ். (Pakistan Naval Ship) காஜி&lt;/strong&gt;&lt;br /&gt;அதென்ன ஜெர்மனியைப் பற்றி இரண்டு பதிவுகள்...இந்தியாவைப் பற்றி ஒன்றுமேயில்லையா என்பவர்க்காக இந்தப் பதிவு. 1971'ல் - இந்திய பாகிஸ்தான் யுத்தத்தில் நடந்த மிக முக்கியமான நிகழ்ச்சி இது.&lt;br /&gt;&lt;br /&gt;1963 - அமெரிக்கா தனது யு.எஸ்.எஸ். டயாப்லோ நீர்மூழ்கியை நான்கு வருட குத்தகைக்கு பாகிஸ்தானுக்கு வழங்கியது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=tamilts&amp;pid=134302" alt="USS Diablo 479" width="342" height="238" border=0&gt;&lt;br /&gt;&lt;strong&gt;யு.எஸ்.எஸ். டயாப்லோ&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1 ஜூன் 1964'ல் பல்வேறு புதுப்பித்தல்களுடன் பி.என்.எஸ். காஜி பிறந்தது. 28 நீரேவுகணைகளுடன் (Tarpedoes) பி.என்.எஸ். காஜி இந்திய கப்பற்படைக்கு சிம்ம சொப்பனமாய்த் திகழ்ந்தது. அப்போது இந்தியா வசம் நீர்மூழ்கிகள் எனபதும் குறிப்பிடத்தக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=tamilts&amp;pid=134296" alt="Ghazi" border=0&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பி.என்.எஸ். காஜி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காஜி பண்ணிய கோஜி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1965 - இந்திய பாகிஸ்தான் யுத்தத்தில் காஜி பண்ணிய கோஜி (பித்தலாட்டம்) பற்றி பார்ப்போம். &lt;br /&gt;09 செப்டம்பர் (அட தேவுடா மறுபடியும் செப்டம்பரா???) ஐ.என்.எஸ் (Indian Naval Ship) பியாஸ், சோனார் செண்ட் கிடைத்ததும் ஒரு சின்ன தாக்குதலை நடத்தியது. காஜி தப்பியோடியது. 17 செப்டம்பர் இந்தியா 5 கப்பல்களைக் கொண்டு பம்பாய்க்கு தெற்கே காஜியைத் தீவிரமாய்த் தேடத்துவங்கியது. பல சோனார் தொடர்புகள் கிடைத்து தாக்குதல்கள் நடந்தாலும் காஜிக்கு ஒன்றும் நிகழவில்லை. ஒரே ஒரு நீர்மூழ்கி பல கப்பல்களின் தூக்கத்தைக் கெடுத்தது. 22 செப்டம்பர் காஜியின் ஆவணங்கள் மொத்தம் 4 நீரேவுகணைகளை ஏவியதாய்த் தெரிவித்தது. 23 செப்டம்பர், இந்தியாவின் விரைவுபோர்க்கப்பலான (Frigate) ஐ.என்.எஸ் பிரம்மபுத்திராவை "மூழ்கடித்தற்காக" காஜின் கேப்டனுக்கு வீரப் பதக்கம் வழங்கி பாகிஸ்தான் கௌரவப்படுத்தியது. கொடுமையென்னவென்றால் பிரம்மபுத்திரா மீது எந்தத் தாக்குதலும் நடக்கவேயில்லை. போர் முடிந்த பின்னர் டெல்லியிலிருந்து பல்வேறு அயல்நாட்டுக் கப்பற்படை அதிகாரிகளை பம்பாயிலிருந்த பிரம்மபுத்திராவிற்கு அழைத்து வந்து இதை நிரூபணம் செய்ய வேண்டியதாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;1967 - காஜியின் குத்தகை ஒப்பந்தத்தை பாகிஸ்தான் புதுப்பித்தது. 1968'ல் துருக்கி சென்ற காஜியில் கடற்கண்ணி வெடிகள் (Sea Mines) புதைக்கும் செயல்திறனும் சேர்க்கப்பட்டது. 14 நவம்பர் 1971'ல் தனது இயல்பான ரோந்துப்பணிக்காக வங்காள விரிகுடாவுக்கு வந்தது காஜி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=tamilts&amp;pid=134295" alt="GHAZI Karachi Harbour" width="342" height="238" border=0&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கராச்சியில் காஜி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1971 யுத்தம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் கௌரவச் சின்னம் விமானந்தாங்கிக் கப்பல் விக்ராந்த். இக்கப்பலை சேதாரப்படுத்தவும் முடிந்தால் மூழ்கடிக்கவுமெனெ காஜியின் கமாண்டர் ஜாபர் முகமது கானுக்கு கட்டளை பறந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=tamilts&amp;pid=134298" alt="INS Vikrant" border=0&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஐ.என்.எஸ்.விக்ராந்த்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சித்தகாங் சிக்னல் சிக்கல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணி வெடி அகற்றும் கப்பல் மற்றும் நீர்மூழ்கிகளுக்கேத் தேவையான எண்ணெய் பற்றி விசாரித்தறிய வந்த சித்தகாங் (கிழக்கு பாகிஸ்தான்) சிக்னலை இந்தியா மோப்பம் பிடித்தது. அக்கம் பக்கம் கண்ணி வெடி அகற்றும் கப்பல் வரமுடியாது. வேலையுமில்லை. காஜிதான் சந்தடியின்றி விக்ராந்த்தைத் தேடி அலைவது ஊர்ஜிதமானது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=tamilts&amp;pid=134297" alt="Ghazi-Doc" border=0&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஏமாந்த காஜியின் சிக்னல் - விருந்தாக விக்ராந்த் தயாரெனெ....&lt;/strong&gt;&lt;br /&gt;24 செப்டம்பர் 1971'ல் பாகிஸ்தானில் அவசர நிலை (Emergency) அமுலுக்கு வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கிழக்கு கடற்படையின் தலைவராக இருந்தவர் துணை அட்மிரல் என்.கிருஷ்ணன். இவர்தான் காஜியைக் கட்டம் கட்டியவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=tamilts&amp;pid=134301" alt="V Adm N Krishnan" border=0&gt;&lt;br /&gt;&lt;strong&gt;துணை அட்மிரல் கிருஷ்ணன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய கப்பற்படை அனுபவத்தை கண்டிப்பாக இங்கே பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும். விசாகப்பட்டினம்தான் கிழக்குகடற்படையின் தலைமைத்தளம். பம்பாய் மேற்கு&lt;br /&gt;கடற்படையின் தலைமைத்தளம். இரண்டு தளத்திலும் பணியாற்றிய பாக்கியசாலி நான். பம்பாயோ செயற்கைத் துறைமுகம். விசாகப்பட்டினமோ இயற்கைத் துறைமுகம். வெகு எளிதில் நீர்மூழ்கியானது (காஜி போல்) துறைமுகம் அருகில் வரை வரலாம். பம்பாயில் அது முடியாது. நீர்மூழ்கி தரையைத் தட்டிவிடும். மேலும் காஜியின் திட்டப்படி விக்ராந்த்தை ஒரு வழி பண்ணியிருந்தால் (அதுவும் குறுகலான வாயில் அமைந்த விசாகப்பட்டினம் துறைமுகத்தில்) இந்திய கடற்படையையே பாகிஸ்தான் ஆட்டி வைத்திருக்க முடியும். ஏனென்றால் விக்ராந்த் மண்ணைக் கவ்வினால் விசாகப்பட்டினத்திற்கே சீல் வைத்தது போலாகிவிடும். வேறெந்தக் கப்பலும் வெளியே வரமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;13 நவம்பர் 1971'ல் அனைத்து கப்பல்களையும் சென்னையிலிருந்து "போர்ட் எக்ஸ் ரே" என்ற ரகசிய இடத்திற்கு மாற்றினார் துணை அட்மிரல் என்.கிருஷ்ணன். இப்போது கிருஷ்ணனின் தலையாய பணி எப்படியாவது காஜியை, விக்ராந்த் இருப்பதாக நம்ப வைத்து, தனது எல்லைக்கு ஏமாற்றி அழைத்து வந்து போட்டுத்தாக்குவது. கேட்பதற்கு கில்லி விளையாட்டுப் போல் எளிதாக இருந்தாலும், கண்ணுக்கே தெரியாத மாயாவியுடன் கண்ணாமூச்சி விளையாடுவது போல்தான் இந்த ஆட்டம்.&lt;br /&gt;விக்ராந்த் விசாகப்பட்டினத்தில்தான் இருக்கிறது என்பது போல் காட்டிக்கொள்ள அதிகமான உணவுப் பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டன. பஜாரிலுள்ள பாகிஸ்தான் உளவாளிகள் ஏமாந்து&lt;br /&gt;போனார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;விசாகப்பட்டினத்தின் மீனவர்கள் அனைவர்க்கும் நீர்மூழ்கியை இனம் கண்டு கொள்வதெப்படியென்ற வகுப்புகள் நடத்தப்பட்டன. போரில் யார் முந்திக்கொள்கிறாரோ அவர்க்கே வெற்றி மாலை. காஜியோ அகோரப்பசியுடன் அலைய ஆரம்பித்திருந்தது கிருஷ்ணனின் கவலைகளை அதிகரித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;காஜிக்குப் பொறியாய் இந்தியாவின் நாசகாரிக் (Destroyer) கப்பலான ஐ.என்.எஸ். ராஜ்புத் பயன்படுத்தப்பட்டது. ஒரு விமானந்தாங்கிக் கப்பல் என்றுமே தனியாய் பயணிக்காது. பாதுகாவலுக்காக துணையாய் நாசகாரிக் கப்பல்கள், விரைவுக் கப்பல்கள், கடற்கண்ணி வெடி நீக்கும் கப்பல்கள் என்று குழுவாய்த்தான் போகும். அப்படி ஒரு குழு இருப்பது போன்ற பிரமை உருவாக்கப்பட்டது. விக்கிராந்திலிருந்து ஒரு மாலுமி தனது அன்னையின் உடல் நலம் விசாரிக்கும் "சும்மனாச்சுக்கும்" தந்தி வேறு எதிரியை திசை திருப்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;16 நவம்பர் 1971 - காஜி பம்பாயிலிருந்து 400 மைல்களுக்கு அப்பால்&lt;br /&gt;19 நவம்பர் 1971 - இலங்கை கடல்பரப்பில் மையம்    &lt;br /&gt;20 நவம்பர் 1971 - வங்காள விரிகுடா விஜயம்23 நவம்பர் 1971 - சென்னைக்கருகே விக்ராந்த் வேட்டை&lt;br /&gt;&lt;br /&gt;காஜிக்கு பாவம் தெரியாது. தான் பத்து நாட்கள் தாமதமாய் வந்தது சேர்ந்தது. விக்ராந்த்தோ அந்தமான் தீவுக்கருகே பாதுகாப்பாய் தேனிலவு கொண்டாடிக்கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=tamilts&amp;pid=134300" alt="track_chart" width="342" height="238" border=0&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காஜியின் தளத்தடம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;01 டிசம்பர் 1971 - மாலை சுமார் 4:00 மணியளவில் துணை அட்மிரல் கிருஷ்ணன் ராஜ்புத்தின் கமாண்டிங் ஆபீஸரான லெப்டினெண்ட் இந்தர் சிங்கிற்கு பாகிஸ்தானிய நீர்மூழ்கி (காஜி) பற்றி தகவல் தந்ததுடன் உடனே துறைமுகத்தை விட்டு புறப்படும்படியும் கட்டளையிட்டார். திக்குத்தெரியாத காட்டில் காஜி. இருட்டு, ராஜ்புத்தில் ரேடார்/சோனார் இயக்கம் நிறுத்திவைப்பு வேறு காஜியின் குழப்பத்தைக் கூட்டின.&lt;br /&gt;&lt;br /&gt;03/04 டிசம்பர் 1971 - வங்காள விரிகுடாவில் வலம் வந்த ராஜ்புத், கடலில் நீர்மூழ்கி அவசரமாய் மூழ்கியதைப்போல் வந்த நீர்க்குமிழிகளைக் கண்டது. எதற்கு சான்ஸ் எடுப்பானேனென்று போகிற போக்கில் இரண்டு கடல் கண்ணிகளை விதைத்துச் சென்றது. &lt;br /&gt;&lt;br /&gt;04 டிசம்பர் 1971 - விடிகாலை சுமார் 00:15 மணியளவில் 2 பிரும்மாண்டமான வெடிச்சத்தம். பூமியதிர்வோவென மக்கள் சந்தேகப்பட, கிழக்குச் சீமையில் இந்திய மாலுமிகள் கடலினுள் மூச்சடக்கினர். காரணம் கண்டுபிடிக்க. 05 டிசம்பர் 1971 - 32 மீட்டர் ஆழத்தில் காஜி சமாதியானது உறுதிப்படுத்தப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=tamilts&amp;pid=134294" alt="ghazi Debris" border=0&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி.என்.எஸ். காஜியின் கழிவுகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காஜி மூழ்கியதெப்படி? வெவ்வேறு அனுமானங்கள்... அடுத்த பதிப்பில் பார்ப்போமா?&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7146427-108598332003554469?l=ravichandrika.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ravichandrika.blogspot.com/feeds/108598332003554469/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7146427&amp;postID=108598332003554469' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7146427/posts/default/108598332003554469'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7146427/posts/default/108598332003554469'/><link rel='alternate' type='text/html' href='http://ravichandrika.blogspot.com/2004/05/3.html' title=''/><author><name>Vanthiyathevan</name><uri>http://www.blogger.com/profile/11863726847622025741</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7146427.post-108595583138081209</id><published>2004-05-30T15:14:00.000-07:00</published><updated>2004-05-30T15:44:27.966-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;strong&gt;சரித்திரப் பதிவுகள் - 2&lt;br /&gt;&lt;br /&gt;U - படகுகள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்தின் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சில், "இந்த யுத்தத்தில் என்னை மிகவும் கலவரப்படுத்தியது U - படகுகள் ஏற்படுத்திய அபாயம்தான்". ஆமாம் அப்படி U - படகுகள் என்ன பெரிய கொம்பர்களா? பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=tamilts&amp;pid=133914" alt="atlantic_winston_churchill" border=0&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வின்ஸ்டன் சர்ச்சில்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் என்னோட கடற்படை அனுபவத்தை பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும். எந்த வகைக் கப்பலுக்கும் எமனாய் ஆகக்கூடியது நீர்மூழ்கி. சோனார் அலைகள் (கேளா ஒலி அலைகள்...அதாங்க வௌவால் பயன்படுத்துமே) மூலம்தான் நீர்மூழ்கிகளை, தளக் கப்பல்களால் (Surface Ships) கண்டு பிடிக்க முடியும். கடலுக்குள் நீர்மூழ்கியைக் கண்டுபிடிப்பதென்பது "ஒரு பெண்ணின் மனதைத் தொட்டு" காதலைக் கண்டுபிடிப்பதற்கு ஒப்பாகும். சோனார் அலைகளும் இவ்விஷயத்தில் சோடை போய்விடும். பதுங்கி வந்து ஒரே ஒரு நீரேவுகணையை (Tarpedo) குறி பார்த்து அடித்து விட்டால் போதும். டைட்டானிக்கையும் தரை காணச் செய்யலாம். அடித்தபின் விடு ஜூட். இதுதான் பாஸ் U - படகுகள்.&lt;br /&gt; &lt;br /&gt;ஏற்கனவே பிஸ்மார்க் பதிப்பில் கூறியிருந்தேன். இங்கிலாந்துக்கு உணவு, போர்த் தளவாடங்கள் மற்ற அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் வட அமெரிக்காவிலிருந்து அட்லான்டிக் பெருங்கடல் வழியே, வர்த்தகக் கப்பல்கள் மூலமே வந்தடைய வேண்டும். அதைத் தடுக்கச் சென்றுதான் பிஸ்மார்க் பலியானது. 1917'ல் முதலாம் உலகப்போரின் போதே இதே முயற்சியில் ஜெர்மனி ஈடுபட்டு, இங்கிலாந்தை ஏறத்தாழ வெற்றி கண்டதெனலாம்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்தின் சோனாரைக் குழப்பம் செய்ய U - படகுகள் "ஓநாய்க் கூட்டம்" என்ற யுக்தியை பயன் படுத்தின. "இரவிலே கூட்டமாக வெளியே வா...இரக்கமின்றி தாக்கு" இதுவே "ஓநாய்க் கூட்டம்". இதற்கு மற்றொரு பெயர் "மகிழ்ச்சி நேரம்" (கடவுளே !!!). இதற்கு பதிலடிதரும் விதமாக இங்கிலாந்து ஆரம்பித்தது "வேட்டைக்காரன்-போட்டுத்தாக்கு (???) (Hunter-Killer)." அப்படியென்றால் சந்தடியில்லாமல் ஒரு விமானந்தாங்கிக் கப்பலை வர்த்தகக் கப்பல்களுக்கு நடுவே அனுப்பி விட வேண்டியது. U - படகுகள் வந்தால் அதகளம் பண்ண வேண்டியது. &lt;br /&gt;&lt;br /&gt;3 செப்டெம்பர் 1939, விடாக்கண்டன் விக்கிரமாதித்தன் போல் ஜெர்மனியின் U - படகுகள், இங்கிலாந்து கப்பலான ஏதெனியா மற்றும் கரேஜியஸை (U - 9) நீரேவுகணைகளால் மூழ்கடித்து "இரண்டாம் அட்லான்டிக் யுத்தத்திற்கு" அச்சாரம் போட்டது. 13 அக்டோபர் ஹெ.எம்.எஸ். ஆர்க் ராயல் மூழ்கடிப்பு (U - 81, ஜிப்ரால்டரில் நடந்தது, இக்கப்பல்தான் பிஸ்மார்க்கைப் போட்டுப்பார்த்தது). இவற்றில் கரேஜியஸ் மற்றும் ஆர்க் ராயல் இரண்டும் விமானந்தாங்கிக் கப்பல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நார்வே மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஜெர்மனியின் வசம். அப்புறமென்ன? U - படகுகளுக்கு பல முன்னேறு கடற் தளங்கள். "பூந்து விளையாடு ராஜா" எனும் கட்டளைக்காக காத்திருந்தது U - படகுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;உத்தரவு வந்த ஜூன் 1940 முதல் வருடக்கடைசிவரை U - படகுகள் மூழ்கடித்த சரக்கு எடை சுமார் 3,00,00,00,000 கிலோ கிராம். அதற்கு முன்னர் 1 அக்டோபர் 1939 வரை  மூழ்கடித்த சரக்கு 15,30,00,000 கிலோ கிராம் (41 வர்த்தகக் கப்பல்கள் மூழ்கடிப்பு). இத்தனைக்கும் ஜெர்மனி பயன்படுத்தியது மாசத்திற்கு 21 U -படகுகள். &lt;br /&gt;&lt;br /&gt;மே 1941. அதுவரை போரில் நடுநிலை வகித்த அமெரிக்கா&lt;br /&gt;பின்னூட்டமாய் (இது புதிதில்லை சாமி) இங்கிலாந்திற்கு பாதுகாப்பு கப்பல்கள் அனுப்பி உதவி செய்ய ஆரம்பித்தது. செப்டம்பர் மாதம் (அடக்கடவுளே...இங்கேயும் செப்டம்பர் மாதமா?) 1941'ல் அமெரிக்கக் கப்பலான ரூபன் ஜேம்ஸ் ஜெர்மானிய U-562 நீர்மூழ்கியால் ஜலசமாதி கட்டப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=tamilts&amp;pid=133917" alt="HMS barham sink" border=0&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஹெச்.எம்.எஸ். பர்ஹாம் மூழ்குகிறது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தான் ஆடியது திருப்திப்படாமல் இத்தாலியை வேறு ஜெர்மனி இழுத்துவந்தது. செப்டெம்பெர் 1940'திலிருந்து ஜூலை 1943 வரை சுமார் 30 இத்தாலி நீர்மூழ்கிகள், 105 நேச வர்த்தகக் கப்பல்களை மூழ்கடித்தன. 16 நீர்மூழ்கிகள் டுபுக்கு ஆனது வேறு விசயம். (ஆமாம் டுபுக்கு என்றால் என்ன?)&lt;br /&gt;  &lt;br /&gt;1942 "பேரிகை ஒலி". இதுதான் ஜெர்மனின் "மகிழ்ச்சி நேரம்" முடிந்து ஆரம்பிக்கப்பட்டது. பேரிகை ஒலி மூழ்கடித்தது குறைந்தபட்சம் 500 நேசக் கப்பல்கள் (Allied Ships). 225 கோடி கிலோ சரக்கு நாசம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=tamilts&amp;pid=133919" alt="uboatwardrumbeat" border=0&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜெயபேரிகை விளைவு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேசப்படைகளின் நல்ல நேரம். வடக்கு ஆப்பிரிக்கா சென்ற கப்பல்களின் பாதையை U - படகுகள் சரியாக கணிக்காததால் பல கப்பல்+சரக்கு+மனித உயிர் தப்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உச்சகட்டம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜெர்மன் அட்மிரல் டோனிட்ஸ் தனது புனிதமான இலக்கை (அதாவது மாதம் 7,50,000,000 கிலோ சரக்கை நாசம் செய்ய வேண்டும்) ஏறத்தாழ அடைந்த நேரம். நேசப்படைகளும் சும்மாயிருக்கவில்லை. புதிய ரக போர்விமானங்கள், நீர்மூழ்கியெதிர்ப்பு கண்ணி வெடிகள், அதிக பாதுகாப்பு கப்பல்கள் உற்பத்தி, ஓநாய்க்கூட்டம் தவிர்த்து "புதிய பாதை"யென்று சளைக்காமல் ஈடுகொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=tamilts&amp;pid=133916" alt="GERdoenitz" border=0&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அட்மிரல் கார்ல் டோனிட்ஸ்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிப்ரவரியில் 7 நேசக் கப்கல்களுக்கு ஒரு U - படகு வீதம் அட்லான்டிக் காவு வங்கிக்கொண்டிருந்தது. மார்ச்சில் நேசப்படைகளின் கை மெல்ல மெல்ல உயர ஆரம்பித்தது. மே மாதத்தில் நடந்த கடைசி சண்டையில் 41 சரக்கு மற்றும் U - படகுகள் மூழ்க போதுமடா சாமியென மிச்சமிருந்த U - படகுகளுடன் ஜீட் விட்டது ஜெர்மனி. நீண்ட நாட்களுக்குப் பின்னரே இரண்டாம் அட்லான்டிக்ப் போரிலும் ஜெர்மனி மண்ணைக் கவ்வியதென்று உலகுக்குப் புரிந்தது.&lt;br /&gt; &lt;br /&gt;ஜெர்மனியின் நகரங்களை நேசப் படைகள் குண்டு வீசி நாசப் பண்ணிக்கொண்டிருக்க, டோனிட்ஸ் சிலிர்த்தெழுந்தார். " (ஜெர்மனி) பெண்களும், குழந்தைகளும் அவஸ்தை படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பீர்களா? U - படகுகளின் பயணம் தியாகம் நிறைந்தது. எனக்கு வேறு வழி தெரியவில்லை. U - படகுகள் யுத்தம் தொடரும்".&lt;br /&gt;&lt;br /&gt;1943'ல் ஜூனிலிருந்து செப்டம்பர் வரை U - படகுகளுக்கு சனி திசை. போன இடத்திலெல்லாம் மரண அடி. மூழ்கிய கணக்கோ 107 நேசக்கப்பல்களுக்கு 136 U - படகுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=tamilts&amp;pid=133915" alt="boa_VIICsub U-426 Sinks" border=0&gt;&lt;br /&gt;&lt;strong&gt;U-426 மூழ்கடிக்கப்படுகிறது&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;U - படகுகளால் இரண்டாம் உலகப்போரில் 30,000 நேசப்படையினர் பலி. சுமார் 28,000 ஜெர்மனியினர் பலி. அட்மிரல் டோனிட்ஸின் மகன் உள்பட. போரின் இறுதியில் 154 U - படகுகள் சரணாகதியடைய, 232 U - படகுகள் தற்கொலை (தனக்குக்தானே வெடிவைத்து) செய்துகொண்டதுதான் பரிதாபம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=tamilts&amp;pid=133918" alt="u352_wreck" border=0&gt;&lt;br /&gt;&lt;strong&gt;U-352 கடலடியில்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;1944'ல் ஜெர்மானிய மாலுமிகள் U - படகுகளை வர்ணித்தது "இரும்பு கல்லறைகள்". ஆஹா...5 வருடங்களில் "கடவுள்" ஸ்தானத்திலிருந்து "கல்லறை" ஆன U - படகுகளை என்னெவென்று சொல்ல? வெறுப்பாக ஒரு "ஓ" போடுவோம். &lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7146427-108595583138081209?l=ravichandrika.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ravichandrika.blogspot.com/feeds/108595583138081209/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7146427&amp;postID=108595583138081209' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7146427/posts/default/108595583138081209'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7146427/posts/default/108595583138081209'/><link rel='alternate' type='text/html' href='http://ravichandrika.blogspot.com/2004/05/2-u-u.html' title=''/><author><name>Vanthiyathevan</name><uri>http://www.blogger.com/profile/11863726847622025741</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7146427.post-108581226250277472</id><published>2004-05-28T23:28:00.000-07:00</published><updated>2004-05-29T11:27:15.110-07:00</updated><title type='text'></title><content type='html'>&lt;strong&gt;சரித்திரப் பதிவுகள் - 1&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிஸ்மார்க்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய கப்பற் படையில் 7 வருடங்கள் பணிபுரிந்தமையால், கடலும், கலங்களும் என்னை எப்போதும் ஈர்ப்பதுண்டு. அப்படித்தான் இந்த பிஸ்மார்க் கப்பலும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (1815-1898) வாழ்ந்த ஜெர்மனியின் "இரும்பு மனிதர்" தான் பிஸ்மார்க். அவர் பெயரிலில்தான் இந்த பிருமண்டமான கப்பல்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வருடமே உபயோகத்தில் இருந்து, 1941 இளவேனிற் காலத்தில் ஒன்பது நாட்கள் உக்கிரமாகப் போரிட்டு, ஜெர்மனியின் "சூப்பர் ஸ்டார்" ஆனது பிஸ்மார்க்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிறப்பு &amp; அமைப்பு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;7 ஜூலை 1936'ல் தான் பிஸ்மார்க்கின் பூமி பூசை. இதன் நீளம் 251 மீ, அகலம் 36 மீ. மொத்தம் 17 மாடிகளைக் கொண்டது. போர்க்கப்பல்களின் தாரக மந்திரமே "மித, நகரு, போரிடு" (To Float, To Move, To Fight). மும்மந்திரங்களின் மொத்த உரும்வம்தான் பிஸ்மார்க். எத்தனை காயம்பட்டாலும் ஒரு கப்பல் முதலில் முழுகாமல் தாக்குப் பிடிக்க வேண்டும். அதற்கு தேவை நீர்புகா அறைகள். தாக்குதலால் வெளிப்புறத்தின் வழியே நீர் புகுந்தாலும் உடனடியாக அந்த அறை "சீல்" வைக்கப்படும். அவ்வாறு மொத்தம் 22 அறைகள். அவற்றுள் 17 அறைகள் குண்டுகள் துளைக்காத "கோட்டை" (Citadel") எனப்படும் பகுதியில், அதாவது கப்பலின் நடு மையத்தில் அமைந்தது இக்கப்பலின் தனித்துவம். கோட்டையானது கப்பலின் 70 சதவிகிதம் ஆகும். குண்டு துளைக்காமைக்காக தனது மொத்த எடையில் 40% (ஜப்பானிய யாமமடொ கப்பல் வகை இரண்டாவது இடத்தில் 33.2%) செலவிட்டது இன்னொரு சிறப்பம்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=tamilts&amp;pid=133433" alt="Bismarck" border=0&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிஸ்மார்க் அன்று&lt;/strong&gt;&lt;br /&gt;பிஸ்மார்க்கில் முன்னே 4, பின்னே 4 என்று மொத்தம் எட்டு 34 செ.மீ பீரங்கிகள். இவை கப்பல் தளம், கரை மற்றும் விமானங்களை சுக்கு நூறாக்கும் வல்லமை படைத்தவை. ஆண்டன் மற்றும் புருனோ என்பது தலா 2 முன் பீரங்கிகளை உள்ளடக்கிய சுழ்ற்தளத்திலும், சீசர் மற்றும் டோரா தலா 2 பின் பீரங்கிகளை உள்ளடக்கிய சுழ்ற்தளத்திலும் நிறுவப்பட்டன. ஒவ்வறொரு சுழற்தளமும் தலா 1,056 மெட்ரிக் டன் (1,056,000,000 கிலோ) எடை கொண்டது. ஒவ்வொரு பீரங்கியும் தன்னிச்சையாக உபயோகிக்கலாம். இதனால் குண்டுகள் அதிவேகமாக மட்டுமின்றி மிகக் குறுகிய நேரத்தில் துல்லியமாக இலக்கை தாக்க முடியும். இங்கிலாந்து கப்பலான ஹ¥ட்'ற்கு இதுவே எமனானது. இது போதாதென்று பன்னிரெண்டு 15 செ.மீ. பீரங்கிகள் மற்றும் 10.5 செ.மீ. தொலை விமான எதிர்ப்பு பீரங்கிகள் பதினாறு, 3.7 செ.மீ மத்திய தூர  விமான எதிர்ப்பு பீரங்கிகள் பதினாறு, 2.00 செ.மீ சாதாரண விமான எதிர்ப்பு பீரங்கிகள் பதினெட்டு வேறு. "எந்த குண்டு இல்லை இந்த பிஸ்மார்க்கில்" என்று தாரளமாய்ப் பாடலாம். 7910 கி.வா. மின் உற்பத்தித் திறன் கொண்ட ராட்சஸ டீசல் ஜெனரேட்டர்கள், 4.8 மீ விட்டமுள்ள 3 ப்ரொப்பல்லர்கள் என்று கட்டமைப்பைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். விளைவு மற்றும் உளவு பார்க்க 4 அராடோ Ar 196 ரக கடல் விமானங்களும் பிஸ்மார்க்கை அலங்கரித்தன. இந்த விமானங்கள் உண்டி வில் போன்ற அமைப்பில் வானில் ஏவப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;14 பிப்ரவரி 1939 (காதலர் தினம்???) மதியம் 1:00 மணி. கப்பல் வெளிக் கட்டுமானம் முடிந்து நீர் புகும் விழாவில் ஹிட்லர்" ...நமது இரும்பு மனிதரின் ஜோதி அமைதிப் பயணத்திலும், தேவைப்பட்டால் கடினமான நேரத்திலும் வழி நடத்தட்டும்..." என்று முழங்கினார். நான்கு நிமிடம் கழித்து முதன் முதலாக பிஸ்மார்க் நீரைத் தொட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;செப்டம்பர் 1939'ல் போர் மற்றும் கடும் குளிர் தொடர்ந்த போதும், பிஸ்மார்க்கின் மேற்புற கட்டுமானப் பணி, நீராவிக் கலன்கள் மற்றும் பீரங்கி பணி ந்¢ற்கவில்லை.  ஏப்ரல் 1940, 40 நபர்கள் முதன் முதல் பயிற்சிக்காக பிஸ்மார்க் வந்தடைந்தனர். 23 ஜூனில் 3 ப்ரொப்பல்லர்கள் நிறுவப்பட்டன. கப்பலின் அடிப்புறம் புது வர்ணம் பூசப்பட்டது. மொத்தம் 2,065 பேர் வரை இக்கப்பலில் வசிக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பயிற்சி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;12 வாக்னர் நீராவிக் கலன்கள் 130,000 குதிரை சக்திகள் கொண்டது. 24 ஆகஸ்ட் 1940 கப்பற்படைக்கே உரித்தான சடங்குகளுடன் பிஸ்மார்க் ஜெர்மனிக்கு அர்ப்பணிக்கப்பட்டு முழுப்பயிற்சி தொடங்கியது. 15 செப்டம்பர் 1940 (அலைபாயுதே படப்பாலான "செப்டம்பர் மாதம் ...வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டேன்" என்று இங்கிலாந்து பாடப்போவது அப்போது தெரியாது) ஹேம்பர்கிலிருந்து பிஸ்மார்க் பால்டிக்கிற்கு கடல் பயிற்சிக்காக பயணித்தது. அன்று மாலை அட்லான்டிக் எனப்படும் உந்து படகுடன் ஒரு சிறிய உரசல். டேமேஜ் அதிகம் இல்லை. அன்று இரவு இங்கிலாந்து சும்மாயிருக்க மாட்டாமல் தனது உளவு விமானத்தை அனுப்பிப் பார்த்த்து. பிஸ்மார்க்கின் விமான எதிர்ப்பு பீரங்கிகள் 300 குண்டுகளை சரமாரியாகத் துப்பியதைக் கண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடியது உளவு விமானங்கள். &lt;br /&gt;&lt;br /&gt;"கீல் கால்வாய்" என்பது 1895'ம் ஆண்டு கட்டப்பட்டது. 98 கி.மீ. நீளம் கொண்ட இந்த கால்வாய் வடக்கு கடலையும், பால்டிக் கடலையும் மிகவும் பாதுகாப்பாய் இணைத்தது. இந்தக் கால்வாயை 16 செப்டம்பர் பிஸ்மார்க், உந்து படகுகள் மூலம் கடந்தது. மேலும் 2 மாதங்கள் உபகரணங்களை பரிசோதித்தல் தொடர்ந்தது. 130,000 குதிரை சக்தி என்பது 29 கடல் மைலை (1 கடல் மைல் = 1.9 கி.மீ) ஒரு மணி நேரத்தில் கடக்க உதவும் எனறு அனுமானிக்கப்பட்டது. பல்வேறு சோதனைகளுக்குப்பின் அது 150,170 குதிரை சக்தியாக உருமாறியது. இப்போது பிஸ்மார்க்கின் உச்சபட்ச வேகம் மணிக்கு 30.1 கடல் மைல். இந்த காலகட்டத்தில் பிஸ்மார்க்தான் உலகத்தின் மிக விரைவு ஆயுதக் கப்பல். கடலின் பிதாமகனாய்த் தன்னை வரித்துக்கொண்ட இங்கிலாந்து தன் தூக்கத்தை முதல் முறையாய்த் தொலைத்தது. ஒருவழியாக 09 டிசம்பர் 1940'ல் பிஸ்மார்க் ஹேம்பர்க் வந்தடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து கப்பல் குழுவினரும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு தத்தம் உறவினரை (கடைசியாக???) பார்க்கச் சென்றனர். 24 சனவரி 1941 போர்ப்பயிற்சிக்காக மீண்டும் பால்டிக் செல்லவிருந்த பயணம், கீல் கால்வாய் உறைந்ததால் தள்ளிப்போனது. ஒருவழியாய் மார்ச்சில் கீல் கால்வாய் பயணத்தையும் பலத்த பாதுகாப்புடன் கடந்து தனது அனைத்து பரிசோதனை மற்றும் பயிற்சிகளை முடித்தது.  &lt;br /&gt;&lt;br /&gt;அடோல்ப் ஹிட்லரின் தரைப்படை ஐரோப்பாக் கண்டத்தை கபளீகரம் செய்து கொண்டிருந்த காலம். கப்பற் படை மட்டும் சும்மா இருக்க முடியமா? 2 ஏப்ரல் 1941'ல் பிஸ்மார்க்கில் அனைத்து 4 போர்விமானங்களும் தயார். பிறகென்ன...ஜெயபேரிகை கொட்ட ஜெர்மனி தயாரானாது. பூமத்திய ரேகைக்கு வடக்கே, அட்லான்டிக்கில் செயல்படும் வியாபாரக் கப்பல் கூட்டத்தை துவம்சம் செய்யவேண்டும். என்னே புனிதமான குறிக்கோள்...&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்துக்கு மூக்கில் வியர்வை. பிஸ்மார்க்குடன் இணையவேண்டிய ஒரு கப்பலை நீரேவுகணை (Tarpedo) கொண்டு தாக்கியதில் அதன் விமானமும் பலியானது. பட்ட காலிலே படும் என்பது போல மீண்டும் அதே கப்பலை இங்கிலாந்து விமானப்படை 4 குண்டுகள் வீசியதில் அந்த கப்பலுக்கு பலத்த சேதம். இப்போது பிஸ்மார்க்குடன் ஒரே ஒரு போர்க்கப்பலே (பிரின்ஸ் யூகென்) துணை. இருப்பினும் அமைதியாய் அட்லான்டிக்கில் கலந்து எதிரியை அழிக்க ஜெர்மனி துடித்தது. தாக்குதல் தாமதமானால் இரண்டு தலைவலிகள் நேரலாம். அமெரிக்கா யுத்தத்தில் எப்போது வேண்டுமானாலும் குதிக்கலாம். இங்கிலாந்திற்கு முக்கிய பொருட்கள் அட்லான்டிக் மூலம் வந்தடையக்கூடும். தாக்குதலை துரிதப்படுத்தும் வகையாக U படகுகள் (அந்நாளைய ஜெர்மன் நீர்மூழ்கிகள்) உதவியும் நாடப்பட்டது. பிஸ்மார்க்கின் பயணத்திட்டம் U படகுகளின் கமாண்டருக்குத் தெரிவிக்கப்பட்டது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரைன் பிரவர்த்தனம்  (OPERATION RHEINUBUNG) &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;22 ஏப்ரல் 1941, போர் முரசு கொட்டவே இந்த பிரவர்த்தனம். துணைக் கப்ப்லுக்கு நேர்ந்த சிறிய விபத்தால் பயணம் தள்ளி வைக்கப்பட்ட போது பிஸ்மார்க்கின் கேப்டன் தனது போர்க்குறிப்பேட்டில் இவ்வாறு எழுதினார், "....நாங்கள் எதிரியை உடனடியாக எதிர் கொள்ளத் துடிக்கிறோம்..."&lt;br /&gt;&lt;br /&gt;5 மே 1941, ஹிட்லர் பிஸ்மார்க்கை விஜயம் செய்கிறார். 18'ம் தேதி பிஸ்மார்க் தனது துணைக்கப்பல் மற்றும் மூன்று பாதுகாப்பு கப்பல்களுடன் புறப்பட்டது. 20'ம் தேதி மதியம் ஒரு மணியளவில் ஸ்வீடன் கப்பல் இதனைப் பார்த்தவுடன் இங்கிலாந்திற்கு செய்தி பறந்தது. 21'ம் தேதி தனது உளவு விமானம் மூலம் இச்செய்தியை இங்கிலாந்து ஊர்ஜிதம் செய்துகொண்டது. தனது எரிபொருளை நிரப்பிக்கொள்ள கிடைத்த வாய்ப்பை பிஸ்மார்க் செய்யவில்லை. இங்கிலாந்தோ உடனடியாக டென்மார்க் ஜலசந்திக்கு 2 போர்க்கப்பல்களை அனுப்பி வைத்தது. மேலும் 21'ம் தேதி இரவு ஹெச்.எம்.எஸ். ஹ¥ட், ஹெச்.எம்.எஸ். பிரின்ஸ் ஆப் வேல்ஸ் ஆகிய கப்பல்கள் ஐஸ்லாந்தைப் பாதுகாக்கக் கிளம்பின. 22'ம் தேதி இரவு பிஸ்மார்க் நார்வேயை விட்டுக் கிளம்பியது.  &lt;br /&gt;&lt;br /&gt;டென்மார்க் ஜலசந்திப் போர் (ஐஸ்லாந்து யுத்தம்)&lt;br /&gt;&lt;br /&gt;ஜெர்மன் கப்பல்களுக்கும் (பிஸ்மார்க், பிரின்ஸ் யுகென்), இங்கிலாந்து கப்பல்களுக்கும் (ஹெச்.எம்.எஸ். ஹ¥ட், ஹெச்.எம்.எஸ். பிரின்ஸ் ஆப் வேல்ஸ்) நடந்த சுமார் ஒண்ணேகால் மணி நேர யுத்தம் இது.     &lt;br /&gt;&lt;br /&gt;ஹெச்.எம்.எஸ். ஹ¥ட் என்பது பிஸ்மார்க் போல் வலிமையானது என்றாலும் இருபது வருடங்கள் பழமையானது. துணை-அட்மிரல் ஹாலண்ட் தலைமையில் ஹ¥ட் மிக விரைவாக பிஸ்மார்க்கை நேரெதிர் கொள்ள விழைந்தது. ஏனெனில் தூரத்து இலக்கை மிக எளிதாக தாக்கியழிக்கும் வல்லமை வாய்ந்தது பிஸ்மார்க். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=tamilts&amp;pid=133434" alt="HMS Hood" border=0&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஹெச்.எம்.எஸ்.ஹ¥ட்&lt;/strong&gt;&lt;br /&gt;அட்மிரல் லூடியன்ஸ் (தமிழ்ப்படுத்தியதில் தவறிருந்தால் மன்னிக்கவும்) தலைமையிலான பிஸ்மார்க்கோ அட்லான்டிக் அடைந்துவிட துடித்தது. ஆனால் ஹ¥ட் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை. விதி வலிமையானது அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;24 மே 1941 காலை மணி 5:53 ஹ¥ட் மற்றும் பிரின்ஸ் ஆப் வேல்ஸ், ஜெர்மன் கப்பல்கள் மீது குண்டு மழை பொழிய ஆரம்பித்தது. சிறிது தயக்கத்திற்குப் பின்னர் பிஸ்மார்க்கும், பிரின்ஸ் யுகென்ன்னும் பதில் கொடுக்க ஆரம்பித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=tamilts&amp;pid=133432" alt="bismarck vs hood" border=0&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஹெச்.எம்.எஸ்.ஹ¥ட் VS பிஸ்மார்க்&lt;/strong&gt;&lt;br /&gt;காலை சுமார் ஆறு மணியளவில் பிஸ்மார்க்கின் ஐந்தாவது ரவுண்டு குண்டுகள் ஹ¥ட்டை பதம் பார்த்தன. பிஸ்மார்க்கில் ஜெர்மனியர்கள் தங்கள் கண்களையே நம்பாமல் பார்த்துக் கொண்டிருக்க, இங்கிலாந்தின் பெருமையான ஹ¥ட் மூழ்கிக்கொண்டிருந்தது. மூன்றே நிமிடங்கள்தான். 1,415 பேர் ஜல சமாதி. பிழைத்தது மூன்றே பேர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=tamilts&amp;pid=133435" alt="Hood Gone" border=0&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஹெச்.எம்.எஸ்.ஹ¥ட் மூழ்கியது&lt;/strong&gt;&lt;br /&gt;பிரின்ஸ் ஆப் வேல்ஸோ மூழ்கும் ஹ¥ட்டைத் தவிர்த்து ஒதுங்கும் போது பிஸ்மார்க் முன்னர் வர வேண்டியதாகிப் போய்விட்டது. சும்மாயிருக்குமா பிஸ்மார்க்? போட்டுக் தாக்குடா பெரியசாமியென்று குண்டு பொழிந்தது. பிரின்ஸ் ஆப் வேல்ஸின் பிரிட்ஜ் தீக்கிரையானது. கேப்டன் உயிர் பிழைத்தார். நான்கு முறை பிஸ்மார்க்காலும், மூன்று முறை பிரின்ஸ் யூகென்னாலும் அடிவாங்கி யுத்தகளத்தை விட்டுப் பறந்தது பிரின்ஸ் ஆப் வேல்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;வேட்டையாட வந்தவர்களே வேட்டையாடப்பட்டது விந்தைதானே...?&lt;br /&gt; காயப்பட்ட கப்பலை விடுத்து ஜெர்மன் கப்பல்கள் தங்கள் பயணத்தை தொடர்ந்ததும் விந்தைதான்.&lt;br /&gt;போரில் பிஸ்மார்க்கும் சிறிது காயம்பட்டது. அதன் காரணமாக இழந்த எரிபொருள், பின்னர் இடைஞ்சல் கொடுக்கப்போவதை பிஸ்மார்க் அறியவில்லை.&lt;br /&gt; தனக்கேற்பட்ட பழுதுகளை செப்பனிடும் பொருட்டு பிஸ்மார்க், பிரான்ஸ் கரைக்கு விரைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹ¥ட் மூழ்கியதைக் கேள்விப்பட்ட இங்கிலாந்து பெரும் சோகத்தில் ஆழ்ந்தது. "அனைத்து போர்க்கப்பல்களும் பிஸ்மார்க்கைத் தேடியழிக்கட்டும்" என்று முகம் சிவக்க ஆணையிட்டார் பிரதம மந்திரி சர்ச்சில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;24'ம் தேதி மாலை தன்னைத் துரத்தும் இங்கிலாந்து கப்பல்களிடம் இருந்து தப்பிக்க பல்வேறு உத்திகளைக் கையாண்டதில் பிஸ்மார்க்கின் எரிபொருள் மேலும் கணிசமாகக் குறைந்தது. நார்வேயில் நிரப்பாதது எவ்வளவு பெரிய மடத்தனம். யாரை நொந்துகொள்வது?&lt;br /&gt;&lt;br /&gt;விக்டோரியஸ் என்ற இங்கிலாந்துக் கப்பலிலிருந்து புறப்பட்ட போர்விமானங்கள் சரமாரியாக நீரேவுகணைகளை வீசி பிஸ்மார்க்கைத் தாக்கியது. கப்பலுக்கு சேதாரமில்லையென்றாலும் முதல் உயிர்ப்பலி நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;25'ம் தேதி விடிகாலையில் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மற்றும் பிஸ்மார்க்கிடையே ஒரு சிறிய யுத்தம். சுமார் நான்கு மணியளவில் தன்னைத் தொடரும் கப்பல்களுக்குத் தண்ணி காட்டிவிட்டு புதிய மார்க்கத்தில் பயணித்தது பிஸ்மார்க். அன்றுதான் அட்மிரல் லூடியன்சின் பிறந்த நாள். தனது உரையில் "பிஸ்மார்க்கின் வீரர்களே! ஹ¥ட்டை மூழ்கடித்தன் மூலம் எதிரிக்கு ராணுவரீதியாக மட்டுமின்றி மனதளவிலும் மரண அடி கொடுத்து விட்டோம். பதிலடிக்காக எதிரிகள் முழுவீச்சில் தாக்குதல் நடத்தக்கூடும். வர்த்தகக் கப்பல்களைத் தாக்கியழிக்கும் பணியை ப்ரின்ஸ் யூகென்னுக்குத் தந்துவிட்டேன். ப்ரின்ஸ் யூகென்னும் எதிரியின் கண்ணில் மண்ணைத் தூவித் தந்திரமாய்த் தப்பிவிட்டது. எதிரிகள் எப்போதுவேண்டுமானாலும் தாக்கக்கூடும். ஜெர்மனி தேசமே நம்மோடு. நமது பீரங்கிகள் தீச்சுடரை கக்கட்டும். கடைசிக் குண்டு பீரங்கியை விட்டு அகலும்வரை போரிடுவோம். இப்போது நமது போர்முழக்கம் வெற்றி அல்லது வீர மரணம்". அன்று மாலையே ஹிட்லர் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை அட்மிரலுக்குத் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;26 மே காலை சுமார் 10:10 அளவில் (முப்பத்த்¢யோரு மணி நேர கண்ணாமூச்சிக்குப் பின்) இங்கிலாந்தின் உளவு விமானங்கள் பிஸ்மார்க்கைக் கண்டு கொண்டன. துரதிருஷ்டவசமாய் இங்கிலாந்தின் கிங் ஜார்ஜ் V மற்றும் ராட்னி கப்பல்கள் பிஸ்மார்க்கைவிட தொலை தூரத்திலிருந்தன. தாக்குதல் தாமதமானது.&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=tamilts&amp;pid=133436" alt="Last German Photo Bismarck" border=0&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிஸ்மார்க் கடைசிப் போட்டோ&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதியம் மூன்று மணியளவில் தனது கப்பலான ஷெப்பீல்டையே பிஸ்மார்க்கெனெ நினைத்து, 11 நீரேவுகணைகளால் இங்கிலாந்து தாக்கியது. நல்ல வேளையாய் ஷெப்பீல்டு தப்பித்தது. சொந்தத் தாக்குதலிலிருந்து தப்பிப்பிழைத்த ஷெப்பீல்டின் கண்களுக்கு பிஸ்மார்க் தென்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;போரின் உச்சக்கட்டம் ஆரம்பமானது. பிஸ்மார்க்கைப் பழிவாங்க இங்கிலாந்தின் கடைசித் தருணம். விடிந்து விட்டால் பிரெஞ்சுக் கடற்கரைக்கு பிஸ்மார்க் ஓடிப் போய்விடும். மேலும் ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல்களின் உதவியும் சேர்ந்துவிடும். ஏற்கெனவே U-556 எனும் ஜெர்மானிய நீர்மூழ்கி, இங்கிலாந்தின் விமானந்தாங்கிக் கப்பலான ஆர்க் ராயலை மோப்பம் பிடித்துத் தொடர்ந்தது. இந்த ஆர்க் ராயல்தான் விமானங்களை ஏவி ஷெப்பீல்டை போட்டுப் பார்த்தது. இங்கிலாந்தின் அதிருஷ்டம். U-556'ன் அனைத்து நீரேவுகணைகளும் சிறிது நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட யுத்தத்தில் காலியாக்கி விட்டிருந்தது. எனவே கொட்டாவி விட்டபடி ஆர்க் ராயல் செல்லும் பாதையில் "நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ " என்று பாடித் தொடரத்தான் முடிந்தது. தொல்லை கொடுக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முடிந்தது மோகன வாழ்வு&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்க் ராயலிலிருந்து புறப்பட்ட ஸ்வார்டு பிஷ் ரக போர்விமானங்கள் இரவு சுமார் 8:47'க்கு நீரேவுகணைகளால் பிஸ்மார்க்கைத் தாக்கத் தொடங்கியது. பிஸ்மார்க்கின் விமான எதிர்ப்பு பீரங்கிகள் முழங்கின. இருப்பினும் இடது விலாவில் ஒன்று, வலது காலில் ஒன்றென இரண்டு நீரேவுகணைகள் பிஸ்மார்க்கைப் பதம் பார்த்தன. சுக்கான்கள் பலத்த சேதமடைந்தன. வெள்ள மட்டம் "கன்னா பின்னா" வென கப்பலினுள்ளே ஏற ஆரம்பித்ததாலும், கடல் வேறு அதிகமாக வெளியே பொங்கியெழுந்ததாலும், சுக்கான்களை பழுது பார்த்தல் என்பது முடியாமல் போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு 9:40'க்கு பிஸ்மார்க்கிலிருந்து ஜெர்மனிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது "கப்பலை திறம்பட இயக்க முடியவில்லை. கடைசிக்குண்டு இருக்கும் வரை போரிடுவோம். வாழ்க ஹிட்லர்".&lt;br /&gt;&lt;br /&gt;சுக்கான்கள் பழுதுபட்டதால் தனது வேட்டைக்காரரையே நாடும் இரையாகியது பிஸ்மார்க். செலுத்துவானின் (Steeering Wheel) கட்டளைக்கு கப்பல் பணிய முடியவில்லை. முதலில் எதிர்பட்டது ஷெப்பீல்டு. ஆறு முறை முழங்கியது பிஸ்மார்க்கின் பீரங்கிகள். தப்பியோடிய ஷெப்பீல்டில் ராடார் சேதம் மற்றும் மூவர் பலி.&lt;br /&gt;&lt;br /&gt;இரவு 10:48'க்கு போலந்து மற்றும் இங்கிலாந்தின் நான்காவது நாசகாரிக் கப்பற்படைக் கூட்டம் பிஸ்மார்க்கை மொய்த்துக் கொண்டது. 27 மே காலை 7:00 மணி வரை மொத்தம் 16 நீரேவுகணைகளை வெற்றிகரமாய் தவிர்த்து அடிபட்ட சிங்கம் போல பிஸ்மார்க் வீரமுடன் போராடியது.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று நாட்கள் முன்னர் முப்பது நாட் வேகத்தில் தண்ணீர்ப் பாய்ச்சல் காட்டிய பிஸ்மார்க் இன்று ஏழு நாட் வேகத்தில் நொண்டியடித்தது. கப்பல் குழுவோ களைத்துப் போயிருந்தது. 8:43'க்கு ஒரு வழியாய் கிங் ஜார்ஜ் V மற்றும் ராட்னி, பிஸ்மார்க்கிற்கு 23 கி.மீ. தூரத்தில் வந்தடைந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;8:47'க்கு ராட்னியும், 8:48'க்கு கிங் ஜார்ஜ் V'ம் குண்டு மழையைத் தொடங்கின. 8:54'க்கு நோர்போல்க், 9:04'க்கு டோர்செட்ஷயர் சேர்ந்து கொண்டது. &lt;br /&gt;&lt;br /&gt;9:13'க்கு ஆண்டன் மற்றும் புருனோ என்னும் பிஸ்மார்க்கின் பீரங்கிகள் செயலிழந்தன. பின்னாலிலிருந்த பீரங்கிகளைக் கொண்டு போரைத்தொடர்ந்தது பிஸ்மார்க். 9:31'க்கு அனத்து பீரங்கிகளும் செயலிழக்க, பிஸ்மார்க்கின் கேப்டன் கப்பலைக் கைவிடுமாறு கட்டளையிட்டார். பிஸ்மார்க்கின் போர்க் குறிப்பேட்டை விமானம் மூலம் கொண்டு செல்ல கடைசி முயற்சி உண்டி வில் சரியாக வேலை செய்யாததால் தோற்றுப்போனது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிஸ்மார்க் போரிடும் சக்தியை இழந்து பரிதாபமாக ஊர்வதைப் புரிந்து கொண்ட ராட்னி, ஸ்பெயினில் நடக்கும் "காளைச் சண்டையில் கத்தியைப் பாய்ச்சுவதற்கு" மிக வேகமாக முன்னேறியது. 2 நீரேவுகணைகளில் ஒன்று மீண்டும் பிஸ்மார்க்கின் இடது விலாவை பதம் பார்த்தது. நோர்போல்க் நீரேவுகணை ஏவியதில் பிஸ்மார்க்கின் வலது புறத்தில் மேலும் ஒரு பெரிய காயம். &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது பிஸ்மார்க் கப்பலில் எஞ்சியிருந்தது பெருங்குழப்பம். எங்கு பார்த்தாலும் கரும் புகை... சரமாரியாய் குண்டுத்துளைகள். செயலிழந்த பீரங்கிகள் தன் போக்கிற்கு வாய் பிளந்து பரிதாபமாய் நின்றன. கடலிலோ தப்பிப் பிழைக்க குதித்த மனிதத் தலைகள். மொத்ததில் பிஸ்மார்க் மதுரைக் கொத்து புரோட்டாகிப் போனது. அப்படியும் "மூழ்கமாட்டேன்" என அடம் பிடித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;10:20'க்கு டோர்செட்ஷயர் மேலுமிரண்டு நீரேவுகணைகளால் பிஸ்மார்க்கைத் துளைத்தது. ம்ஹ¥ம் மாட்டேன்...அடம் தொடர்ந்தது. சுற்றி வந்த டோர்செட்ஷயர் மேலும் ஒரு நீரேவுகணையை இடது விலாவில் அனுப்பியது. ஒருவழியாய் 10:39'க்கு , சண்டை துவங்கி 2 மணிநேரம் கழிந்து, பிஸ்மார்க் "போதுமென்ற மனதுடன்" மூழ்க ஆரம்பித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=tamilts&amp;pid=133431" alt="bismarck Gone" border=0&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிஸ்மார்க் மூழ்கியது&lt;/strong&gt;&lt;br /&gt;ஹ¥ட்டோ குண்டுகள் விழுந்து மூன்றே (தாக்குதல் தொடர்ந்த ஆறு நிமிடத்தில்) நிமிடத்தில் மூழ்கியதை "ஞாபகம் வருதா"? மொத்தம் 74 நிமிடங்களில் பிஸ்மார்க்கை நோக்கி ஏவப்பட்ட குண்டுகள் சுமார் 2,876. அவற்றில் சுமார் 400-600 குண்டுகள் கப்பலைத் தாக்கியிருக்கலாம். வரலாற்றில் இப்படியொரு அடியை எந்தக் கப்பலும் எதிர்கொள்ளவில்லை. மொத்தம் 2,200 பேரில் உயிர் பிழைத்தது 115. &lt;br /&gt;&lt;img src="http://www.weblogimages.com/v.p?uid=tamilts&amp;pid=133437" alt="wreck2" border=0&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பிஸ்மார்க் கடலடியில் (நன்றி: டிஸ்கவரி)&lt;/strong&gt;&lt;br /&gt;28'ம் தேதி ஜெர்மானியப் போர்விமானங்களின் தாக்குதலில் இங்கிலாந்துக் கப்பலான மஷோனா மண்ணைக் கவ்வியது. மாண்டவர் 46. மீண்டவர் 170.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பத்து நாள் நடவடிக்கையில் பிஸ்மார்க்கில் மற்றும் பிஸ்மார்க்கால் மாண்டவர் 4,550. மீண்டவர் 288. பிஸ்மார்க்கி(கா)ல் மாண்டவருக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோமே !!!&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7146427-108581226250277472?l=ravichandrika.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ravichandrika.blogspot.com/feeds/108581226250277472/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7146427&amp;postID=108581226250277472' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7146427/posts/default/108581226250277472'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7146427/posts/default/108581226250277472'/><link rel='alternate' type='text/html' href='http://ravichandrika.blogspot.com/2004/05/1-7.html' title=''/><author><name>Vanthiyathevan</name><uri>http://www.blogger.com/profile/11863726847622025741</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry></feed>
